Farm Info

Thursday, 08 October 2020 06:53 AM , by: Elavarse Sivakumar

இயந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் 
முதல்போக நெல் நடவுக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் தற்போது ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக நாற்றங்கால் தயாராகி ஒரு சில இடங்களில் நெல் நாற்று நடவு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

ரூ. 5ஆயிரம் மானியம் (Rs.5000 Subsidy)

இதையடுத்து திருப்பரங்குன்றம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்குட்பட்டவருவாய் கிராமங்களில் இயந்திரம்மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்குஎக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாகஉதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், திருந்திய நெல் சாகுபடி முறையில் இயந்திர நடவுசெய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.  எனவே விவசாயிகள் எந்திர நடவுக்கு மாறுவதற்கு வேளாண்மை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

  • பட்டா

  • சிட்டா

  • அடங்கல்

  • ஆதார்

  • புகைப்படம்

ஆகியவற்றுடன் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க...

எந்திர நடவு பணிக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்!

அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்- பூர்வகுடி மக்களை சந்திக்க ஏற்பாடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)