Farm Info

Friday, 09 October 2020 07:13 AM , by: Elavarse Sivakumar

Credit : Flicker

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில், தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றுதல் திட்டத்தில், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் வட்டாரத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் சாகுபடி பணிகளை வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பிரதமர் கிசான் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

ரூ.10 ஆயிரம் மானியம் (Rs.10,000 Subsidy)

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓசூர் வட்டாரத்தில், தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றுதல் திட்டத்தில், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதுவரை மொத்தம், 30 ஹெக்டேர் அளவுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அவர், உரிய ஆவணங்களுடன் விவசாயிகள் வேளாண் அலுவலரை அணுகலாம் எனவும் குறிப்பிட்டார்.

பணம் பறிமுதல் (Cash recovered)

மேலும் PM-Kisan முறைகேடு தொடர்பாக ஓசூர் வட்டாரத்தில் மொத்தம், 617 தகுதியற்ற பயனாளிகள் கண்டறியப்பட்டு, 466 பேரிடமிருந்து, பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜேந்திரன் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க....

இயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை ஊக்கத்தொகை - விவசாயிகளுக்கு அழைப்பு!

மாற்றி யோசிக்க வைத்த மல்பெரி - விற்பனை செய்து வருமானம் பார்த்த விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)