மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 June, 2021 11:36 AM IST

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 300 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.தமிழகத்தில் 80கும் மேற்பட்ட ஒன்றியங்களில் நிலத்தடி நீர்மட்டம் அளவுக்கு கீழே சென்று விட்டது என்று நில நீர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே கிடைக்கும் குறைந்தபட்ச நீரில் அதிக பயிர் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம்.

விவசாயிகள் பாத்திகள் உருவாக்கி மேற்பரப்பில் பாசன முறையை பயன்படுவதினால்,நிலத்தடி நீர் அதிகளவில் வீணாகிறது,அதிகளவில் பாசன நீரால் அதிக விளைச்சலும் கிடைப்பதில்லை.இப்போது இருக்கும் சூழ்நிலையில் சிக்கன நீர்பாசனமான சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி விவசாயிகள் நேரடியாக பயிரின் வேர்களில் சொட்டு நீர் சரியான அளவில் பாய்ச்சுவதன் மூலம் பயிரின் வேர் வளர்ச்சி அதிகரித்து,அனைத்து செடிகளும் செழிப்பாக வளர்கிறது. சொட்டுநீர் பாசனம் முறை நிலத்தடி நீரை 60-70 சதவீதம் வரை சேமிக்க உதவுகிறது மற்றும் சேமிக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு இருமடங்கு நிலத்தில் பயிர் சாகுபடி செய்யவும் உதவுகிறது.

நீர் நேரடியாக பயிரின் வேர்களுக்கு அளிக்கப்பட்டு,மொத்தபரப்பளவில் 8ல் 3 பாகம் மற்றும் ஈரம் ஆவதால் களைகள் வளரும் தன்மை குறைந்து,களையெடுக்கும் செலவும் குறைகிறது.மேலும் பயிரின் தேவைக்கேற்ப நீரில் கரையும் உரங்களை நேரடியாக வேர் பகுதிகளில் அளிக்கப்படுவதால் உரமிடும் ஆள்கூலியும் குறைகிறது. இதனால் தரமான உற்பத்திகளை அதிகளவில் விளைவித்து லாபம் ஈட்ட முடிகிறது.

சொட்டுநீர் பாசனம் தோட்ட பயிர்களுக்கு அமைக்க முதலீடு செலவு அதிகமாக இருப்பதால் தோட்டக்கலை சார்பாக மானியம் வழங்கப்படுகிறது,சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் நடுத்தர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரை 70% மானியம் சொட்டுநீர் பாசனம் அமைக்க தோட்டக்கலை துறையால் வழங்கப்படுகிறது.

இந்த மானிய உதவிகளை பெற அருகி உள்ள தோட்டக்கலை துறைகளை அடைந்து மீதம் தேவைப்படும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க:

சொட்டுநீர் உரப்பாசனத்தின் பயன்கள் மற்றும் பயன்பாடு திறன்

சொட்டுநீர்ப் பாசனத்தின்போது கடைப்பிடிக்க வேண்டியவை எவை?

சொட்டுநீர்ப் பாசன கருவிக்கு 100% மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Rs.11.25 crore Drip Irrigation Subsidy, Deputy Director of Horticulture Information
Published on: 17 June 2021, 11:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now