மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 April, 2022 3:50 PM IST
Schemes like PM Kisan gives new strength to farmers: Prime Minister Modi

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (10 ஏப்ரல் 2022) ஒரு மாநாட்டில் உரையாற்றிய அவர். ​​பிரதமர் கிசான் யோஜனா மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்கள், நமது நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருகின்றன என்று கூறினார்.

விவசாயிகளின் பலத்தை எடுத்துரைத்த மோடி, விவசாயிகள் வலுப்பெறும் போது நாடு தானாகவே முன்னேறும் என்றார். பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், "நாடு நமது விவசாயிகளால் பெருமை கொள்கிறது. அவர்கள் வலுவாக இருந்தால், புதிய இந்தியா வளமானதாக இருக்கும். நான் மகிழ்ச்சி அடைகிறேன்... பிரதமர் கிசான் சம்மன் நிதி மற்றும் விவசாயம் தொடர்பான பல்வேறு திட்டங்கள் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருகிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா மற்றும் பிற திட்டங்கள் பற்றிய தகவல்களையும் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். பகிரப்பட்ட தகவல்களின்படி, இந்தியாவில் உள்ள சுமார் 11.3 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1.82 லட்சம் கோடி நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொற்றுநோய் காலத்தில் ரூ.1,30 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது மற்றும் தொற்றுநோய்களின் போது, ​​1,30 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, இது சிறு விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. மேலும், விவசாய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்காக 11,632 திட்டங்களுக்கு ரூ.8,585 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து ஏபிஎம்சி மண்டிகளும் (சந்தைகள்) டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளன, அதில் 1.73 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் மற்றும் eNAM இல் ரூ 1,87 லட்சம் கோடி வணிகம் நடந்துள்ளது என்றும் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார் .

நேஷனல் அக்ரிகல்ச்சர் மார்க்கெட் (eNAM) என்பது ஒரு இந்திய மின்னணு வர்த்தக இணையதளமாகும், இது விவசாயப் பொருட்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்குவதற்கு தற்போதுள்ள APMC மண்டிகளை இணைக்கிறது.

அவரது, இந்த உரை விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் குறிப்பிட்ட தகவல்கள், விவசாயிகளை ஊக்கமளித்து, அவர்களை பயனடையச் செய்யும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க:

TNPSC 2022: அலுவலர் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசித் தேதி!

நீர் கஷ்கொட்டை மருத்துவ தாவரங்கள் வளர்ப்பிற்கு மானியம் அளிக்கிறது அரசு!

English Summary: Schemes like PM Kisan gives new strength to farmers: Prime Minister Modi
Published on: 12 April 2022, 03:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now