மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 December, 2021 3:54 PM IST
Scientists' gift to farmers: 15 types of natural fertilizers!

நாட்டில் ரசாயனமற்ற விவசாயத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக, இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று (16-Dec-21) நடந்த தேசிய மாநாட்டில் பிரதமர் மோடியும், இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த இயற்கை விவசாயத்தில், கரிம உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும், ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஊடக அறிக்கையின்படி, மத்திய பிரதேசத்தில் இருந்து வந்திருக்கும் இந்த தகவல் நற்செய்தி அல்லவா. 15 வகையான, இந்த உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என்றும், பூச்சி மற்றும் நோய் பாதிப்புகள் குறையும் என்றும் இவ்விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மாநிலத்தின் மிகப்பெரிய வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த இயற்கை உரம் தயாரிப்பதன் மூலம் விவசாயிகளின் பெரிய பிரச்சனையை தீர்த்துள்ளனர். மாநில விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டை 25 சதவீதம் வரை குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன், 15 முதல் 20 சதவீதம் கூடுதல் உற்பத்தியும் ஈட்டலாம்.

உற்பத்தி மற்றும் தரம் மேம்படும்(Production and quality will be improved)

டிராக்டர் ஜங்ஷனின் கூற்றுப்படி, மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் விஞ்ஞானிகள் 15 வகையான கரிம உரங்களைத் தயாரித்துள்ளனர். அவருக்கு ஜவஹர் உரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஜவஹர் உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பயிரின் உற்பத்தி அதிகரிப்பதோடு, அவற்றின் தரமும் மேம்படும் என்று கூறப்படுகிறது. இந்த அனைத்து கரிம உரங்களிலும், காற்றில் இருந்து நைட்ரஜன், மக்கும் பொட்டாஷ், பாஸ்பரஸ், துத்தநாகம், விதை நேர்த்தி, சிதைந்த இலைகள் மற்றும் கோதுமை-நெல் எச்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனை உபயோகித்தால் ரசாயன உரங்களை விரும்பமாட்டீர்கள்(You will not like chemical fertilizers if you use this)

தொடர்ந்து ரசாயன உரங்களைப் பயன்படுத்தி இருப்பதால், அது மண்ணில் தங்கியிருக்கும் என நம்பப்படுகிறது. எனவே, கரிம உரங்களை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து பயன்படுத்த வேண்டும், அதன் பிறகே விவசாயிகள் ரசாயன உரங்களிலிருந்து விடுபடுவார்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

முதல் ஆண்டில் 25 சதவீதமும், இரண்டாம் ஆண்டில் 50 சதவீதமும், மூன்றாம் ஆண்டில் 75 சதவீதமும், ரசாயன உரப் பயன்பாட்டைக் குறைத்து நான்காம் ஆண்டில் முழூவதுமாகவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த தொடங்கலாம்.

இரண்டு வகையான கரிம உரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன(Two types of organic fertilizers are prepared)

ஜவஹர்லால் வேளாண்மைப் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள உரம் இரண்டு வகையானது, விவசாயிகளுக்கு தூள் வடிவில் மற்றும் திரவ உரங்கள் வடிவில் என இரண்டு வகையில் கிடைக்கும். விவசாயிகள் எந்த உரத்தை எடுக்க விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்தது, ஆறு மாதங்கள் வரை பொடி செய்த கரிம உரத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும், ஆனால் திரவ உரம் ஒரு வருடம் வரை பயன்படுத்த முடியும்.

கரிம உரங்களின் நன்மைகள்(Benefits of organic fertilizers)

இயற்கை உரம் மூலம், விவசாயிகள் நீண்ட காலம் பயிரிடலாம், சுற்றுச்சூழலுக்கும், மண்ணுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

கரிம உரங்கள் மலிவானவை மற்றும் விவசாயிகள் சுயமாக தங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். எனவே ரசாயன உரங்களை வாங்குவதை விட விவசாயிகளுக்கு இது செலவு குறைவாகவும், வருமானம் பெருகவும் உதவுகிறது.

ஆர்கானிக் பொருட்களுக்கு சந்தையில் வாடிக்கியாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் படிக்க:

விவசாயிகள் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு! மருத்துவ தாவரங்களை வழங்கும் அரசு!

FPO-வின் கேம் சேஞ்சர் திட்டம்! வங்கிகள் கூறுவது என்ன?

English Summary: Scientists' gift to farmers: 15 types of natural fertilizers!
Published on: 17 December 2021, 03:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now