மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 January, 2021 6:22 PM IST

கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கக் கோரி, காவிரி டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் முன் ஜனவரி 22ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என காவிரி விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியத்தில் தென்பிடாகை, மேலக்குருவாடி, திருக்கண்ணபுரம், கீழப்பூகனூர், மோனப்பூதனார், மருங்கூர், எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாயார் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது :

இழப்பீடு போதாது (Compensation is not enough)

கனமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 இழப்பீடு என்பது யானைப் பாக்கு சோளப்பொறி போன்றது.

பயிர்க்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை முதல்வர் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

காவிரி டெல்டாவை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.

22ம் தேதி முற்றுகை (Siege on the 22nd)

இவைதான் நாங்கள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கைகள். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ம் தேதி, டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!

விவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது!!

ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!

English Summary: Siege protest in Delta districts on the 22nd demanding relief !
Published on: 19 January 2021, 06:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now