நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 April, 2023 5:40 PM IST
Surplus production of Nendran bananas is low! Farmers worry!

உபரி உற்பத்தி குறைந்ததால், திருச்சியில் உள்ள நேந்திரன் வாழை விவசாயிகள் கடனில் மூழ்கியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நேந்திரன் வாழை பயிரிடும் விவசாயிகள், சந்தை ஏற்ற இறக்கங்களால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு லாபகரமான விகிதங்கள் காரணமாக நேந்திரன் வகையை நோக்கி ஒட்டுமொத்தமாக மாறியது, விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்த உபரியை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன. திருச்சி மாவட்டத்தில், அந்தநல்லூர் தொகுதியில் முக்கியமாக குமார வயலூர் மற்றும் பெருகமணி ஊராட்சிகளில் சுமார் 950 ஹெக்டேரில் நேந்திரன் வாழை பயிரிடப்படுகிறது.

கடந்த ஆண்டு, நேந்திரன் வாழைப்பழம் கிலோ, 34 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கிலோ ஒன்று 19 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ரகத்தை பயிரிட, பெரும் தொகையைச் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. வயலூரை சேர்ந்த விவசாயி ராஜ்குமார் பி கூறும்போது, “நேந்திரன் வாழை அதிக உழைப்பு தேவைப்படும் பயிராகும், அதிக உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை செலவழித்ததாகவும், ஆனால் வருமானம் ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.

"2021 ஆம் ஆண்டில் கோவிட்-19-ன் போது, நேந்திரன் விலை கிலோவுக்கு 8 ஆக இருந்தது. ஆனால் ஒரு வருடம் கழித்து, சந்தை திறக்கப்பட்டதால், வாழைப் பழத்திற்கு அதிக தேவை இருந்தது, இதன் விளைவாக விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கத் தொடங்கியது. ஏராளமான நேந்திரன் இரகத்தின் தேவை அதிகரிப்பதைக் கண்டு விவசாயிகள் பயிரிடத் தேர்ந்தெடுப்பதாகக் கூறப்படுகிறது.

நிலையான சந்தைக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக வாழையைப் பயிரிட, விவசாயிகளை அரசு தயார்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. திருச்சியில் மட்டும் கடந்த ஆண்டை விட நேந்திரன் சாகுபடி 100 ஹெக்டேர் அதிகரித்து, கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேந்திரன் சாகுபடி அதிகரித்துள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க அழைப்பதாகவும், ஆனால் நேந்திரப் பழத்திற்கு வாங்குபவர்களை வற்புறுத்துவது கடினமாக உள்ளது என்றும் விவசாயிகள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

மேலும் படிக்க

மனித-விலங்கு மோதலை தடுக்க ரூ. 2 கோடி செலவு!

இந்த ஆண்டு நிலக்கடலை விளைச்சல் குறைவு!

English Summary: Surplus production of Nendran bananas is low! Farmers worry!
Published on: 10 April 2023, 05:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now