Farm Info

Friday, 05 November 2021 11:23 AM , by: R. Balakrishnan

The best ways to protect crops

மழைக்காலத்தில் பயிர்களில் தோன்றும் வாடல், வேரழுகல் மற்றும் தண்டழுகல் நோய்க்காரணிகளான பியூசோரியம், ரைசக்டோனியா, ஸ்கிளிரோசியம் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிக்கலாம்.

விதைநேர்த்தி

உயிரியல் முறையில் பருத்தி, பயறுவகைகள், எண்ணெய் வித்துப்பயிர்கள், காய்கறிகள், மலர்கள், பழப்பயிர்களில் நோய்களை கட்டுப்படுத்தலாம். இதற்கு விதைக்கும் முன்பே ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் 10 கிராம் பேசில்லஸ் கலந்து விதைநேர்த்தி செய்தால் அனைத்து நோய்களும் கட்டுப்படுத்தப்படும்.

மண்ணில் எக்டருக்கு 2.5 கிலோ டிரைக்கோடேர்மா விரிடி அல்லது பேசில்லசை 50 கிலோ மட்கிய உரத்துடன் கலந்து 10-15 நாட்கள் நிழலில் வைத்திருந்து இடுவதின் மூலம் வேரழுகலையும், வாடல் நோய்களையும் கட்டுப்படுத்தலாம். வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ இடும்போது மண்ணில் தோன்றும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

வேதியியல் முறையில் கார்பன்டசிம் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்கலாம். கார்பன்டசிம் (பெவிஸ்டின்) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் கலந்து பாதிக்கப்பட்ட செடிகள், அவற்றின் துார்களில் ஊற்றினால் மண் மூலம் தோன்றும் வாடல், வேரழுகலை கட்டுப்படுத்தலாம். மேன்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு லிட்டருக்கு 2 கிராம் கலந்து தெளித்தால் இலை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் கலந்து தெளித்தால் பாக்டீரியா நோய்களை கட்டுப்படுத்தலாம். நோயுற்ற செடிகளை பிடுங்கி எரிக்கவேண்டும். நோயுற்ற நாற்றுக்களை நடக்கூடாது. அளவான தழைச்சத்து, மணிச்சத்து அதிகமான சாம்பல்சத்து அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம்.

கிருஷ்ணகுமார்
தொழில்நுட்ப வல்லுனர்
ஹேமலதா
திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை அறிவியல் நிலையம்,
மதுரை
98652 87851

மேலும் படிக்க

நெற்பயிர் வயல் வரப்பில் பயறு வகை: மகசூலை அதிகரித்து, மன்வளத்தை கூட்டும்

அடுத்த வருடம் குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்கும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)