மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 October, 2021 11:27 AM IST
The plant that gives crores of rupees! Permanent income!

இன்றைய காலத்தில், அனைவரும் வியாபாரம் செய்ய விரும்புகிறார்கள் அதாவது சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறார்கள். ஆனால் பணப் பற்றாக்குறை அல்லது சரியான தொழிலைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தொடங்காமல் இருப்பீர்கள். அதனால்தான் உங்களுக்காக ஒவ்வொரு நாளும் புதிய வணிக யோசனைகளைக் கொண்டு வருகிறோம். இன்றும் நாங்கள் உங்களுக்கு அற்புதமான வணிகத்தைப் பற்றி சொல்கிறோம், அதில் நீங்கள் பெரிய லாபம் சம்பாதிக்கலாம்.

எப்படியிருந்தாலும், சில விஷயங்களுக்கான தேவை ஒருபோதும் தீராது என்பது நாம் அறிந்ததே, அது எந்த பருவமாக இருந்தாலும் அல்லது எந்த நகரமாக இருந்தாலும் சரி. உங்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் இருந்தால், ஒருமுறை இந்த தொழில் செய்ய ஆரம்பித்தால் போதும், உங்கள் வாழ்நாள் முழுவதும் லட்சங்களில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

எனவே இந்த சிறப்பு வணிகம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்

இந்த வணிகம் பிரிஞ்சி இலை வைத்து செய்ய கூடியது, பிரிஞ்சி இலையை நீங்கள் எளிதாக சாகுபடி செய்யலாம், இதை ஆங்கிலத்தில் 'பே இலை' என்று அழைப்பார்கள், இது நம் நாட்டில் லாபகரமான வணிகமாகும். இது ஒரு வகையான உலர்ந்த மற்றும் மணம் கொண்ட இலை ஆகும்.

பிரிஞ்சி இலையின் பயன்

பிரிஞ்சி இலைகளை மசாலாவாக உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. இது பல ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது பல நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் உற்பத்தி செய்யும் நாடுகளில் பெரும்பாலானவை இந்தியா, ரஷ்யா, மத்திய அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் வட அமெரிக்கா மற்றும் பெல்ஜியம் போன்றவை.

பிரிஞ்சி இலை விவசாயத்தை எப்படி தொடங்குவது?

நீங்கள்  பிரிஞ்சி இலை சாகுபடியை எளிதாக தொடங்கலாம். இந்த விவசாயத்தை செய்ய, நீங்கள் ஆரம்ப கட்டத்தில் சில கடின உழைப்புகளை செய்ய வேண்டும். அதன் செடி வளரும்போது, ​​நீங்கள் குறைவான  உழைப்பு போட வேண்டியிருக்கும். செடி வளரத் தொடங்கிய பிறகு மட்டுமே பராமரிக்க வேண்டும். அதன் சாகுபடியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் நல்ல வருமானத்தைப் பெறலாம்.

உங்களுக்கு எவ்வளவு மானியம் கிடைக்கும் தெரியுமா?

இதை பயிரிடும் விவசாயிகளுக்கு தேசிய மருத்துவ தாவர வாரியத்தால் 30 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

எவ்வளவு லாபம் கிடைக்கும்?

இப்போது நாம் லாபத்தைப் பற்றி பேசினால், நீங்கள் ஒரு பிரிஞ்சி செடியிலிருந்து ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். மறுபுறம், நீங்கள் 25  பிரிஞ்சி செடிகளை நட்டால், நீங்கள் ஆண்டுக்கு 75 ஆயிரம் முதல் 1 லட்சத்து 25 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். இந்த வணிகத்தை பெரிதாக்குவதன் மூலம், உங்கள் வருமானத்தையும் அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க: 

பிரிஞ்சி இலை பிரியாணியில் சேர்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியுமா?

English Summary: The plant that gives crores of rupees! Permanent income!
Published on: 23 October 2021, 11:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now