மத்திய அரசிடம் இருந்து விவசாயிகள் ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவிப் பெற வேண்டுமானால், இதை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பணம் கிடைக்காது. எனவே விவசாயிகள் உடனடியாக இதனைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக தலா ரூ.2000 என பிரித்து வழங்கப்படுகிறது.
இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 11ஆவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. இதற்காக பதிவுசெய்த விவசாயிகள் அனைவரும் காத்துக்கிடக்கின்றனர்.இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு விவசாயிகள் தங்களது இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சரிபார்ப்பை முடிப்பதற்கான கால அவகாசம் முடியும் சூழலில், அதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, மே 31ஆம் தேதி வரையில் விவசாயிகள் இந்த வேலையை முடிக்கலாம். இதற்கு முன்னர் மார்ச் 31தான் கடைசி நாளாக இருந்தது.
மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க முடியாத விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கால அவகாசம் தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது ஈசியான காரியம்தான். pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்றாலே அதற்கான வசதி இருக்கும். மோசடியைத் தடுக்கும் விதமாகவும், சரியான பயனாளிகளுக்கு நிதியுதவி சென்று சேரவேண்டும் என்பதற்காகவும் இ-கேஒய்சி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...