சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 26 March, 2022 11:50 AM IST

மத்திய அரசிடம் இருந்து விவசாயிகள் ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவிப் பெற வேண்டுமானால், இதை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பணம் கிடைக்காது. எனவே விவசாயிகள் உடனடியாக இதனைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக தலா ரூ.2000 என பிரித்து வழங்கப்படுகிறது.


இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 11ஆவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. இதற்காக பதிவுசெய்த விவசாயிகள் அனைவரும் காத்துக்கிடக்கின்றனர்.இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு விவசாயிகள் தங்களது இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு சரிபார்ப்பை முடிப்பதற்கான கால அவகாசம் முடியும் சூழலில், அதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, மே 31ஆம் தேதி வரையில் விவசாயிகள் இந்த வேலையை முடிக்கலாம். இதற்கு முன்னர் மார்ச் 31தான் கடைசி நாளாக இருந்தது.

மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க முடியாத விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கால அவகாசம் தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது ஈசியான காரியம்தான். pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்றாலே அதற்கான வசதி இருக்கும். மோசடியைத் தடுக்கும் விதமாகவும், சரியான பயனாளிகளுக்கு நிதியுதவி சென்று சேரவேண்டும் என்பதற்காகவும் இ-கேஒய்சி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

வயிற்றின் நண்பன்- அத்தனை நோய்க்கும் அருமருந்து- அது எது?

நிலத்தடி நீர் குறையும் அபாயம்- விவசாயிகள் கவனத்திற்கு!

English Summary: This is the last chance- If you do not do this, you will not get Rs.6000!
Published on: 26 March 2022, 11:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now