மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 March, 2021 7:13 AM IST
Credit : Times Of India

தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருவதால், அனைத்து பயிர்களுக்கும், மூடாக்கு இட்டு, ஈரப்பதம் காக்குமாறு கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

வறண்ட வானிலை (Dry Weather)

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. பகல் வேளைகளில் வெயில் வாட்டி வதைக்கிறது.

அறிவுறுத்தல் (Instruction)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதியவர்கள் பகல் வேலைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. மக்களும், உடல்நலம் கருதி, நீர் ஆகாரங்கள், பழச்சாறுகள் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவன் செயலி (Uzhavan-App)

இந்நிலையில், வறண்ட வானிலையால் பயிர்கள் பாதிக்கப்படும் நிலையில், அவற்றைப் பாதுகாப்பது குறித்து, உழவன் மொபைல் செயலி வாயிலாக, திருப்பூர் மாவட்ட விவசாயி களுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பின்வரும் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

மூடாக்கு (Close)

திருப்பூர் மாவட்டத்தில், வறண்ட வானிலை துவங்கியுள்ளது. அதிகப்பட்ச வெப்பநிலை, 35 டிசிரி செல்சியஸ் ஆக இருக்கும் வறண்ட வானிலையால், அனைத்து பயிர்களுக்கும் நீர்ப்பாசனம் செய்து, மூடாக்கு இட்டு, மண் ஈரப்பதத்தை பாதுகாக்கலாம்.

பூச்சிகள் தாக்கம் (Impact of insects)

வளர் மற்றும் காய்க்கும் பருவத்திலுள்ள, தக்காளிச் செடிகளில், சாறு உறிஞ்சும் பூச்சிகளின், பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது இதைக்கண்காணித்து, மீன் எண்ணெய் மற்றும் ரோசின் சோப் லிட்டருக்கு, 25 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

தென்னை (Coconut)

தென்னை மரத்தைச் சுற்றி, உள்நோக்கிய, சாய்வு வட்டப் பாத்திகளை அமைத்தால், கோடை மழை நீரை தக்க முறையில், மேற்பகுதியில் சேமிக்க உதவும். இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

சமவெளி பகுதிகளில், ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி! கவலையில் விவசாயிகள்!

பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள்! யாரும் கண்டுகொள்ளாத நிலையில், நோட்டாவுக்கு வாக்களிக்க விவசாயிகள் தீர்மானம்!

English Summary: To protect crops from dry weather, cover is essential-TNAU instruction!
Published on: 22 March 2021, 07:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now