நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 September, 2021 7:54 PM IST
Credit: Hindustan Times

மும்பையில் மீனவர் வீசிய வலையில், அதிசயத் தங்கமீன் சிக்கியது. இதன் மூலம் அந்த மீனவர், ஒரே நாளில் ஓஹோவென மகா கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

மீன்படித் தொழில் (Fishing)

மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் மர்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் டாரே. மீனவரான டாரே மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து, இந்த வாரத் தொடக்கத்தில், முதல் முறையாக தனது படகில் மீன்பிடிக்கச் சென்றார்.

மீன்பிடிக்க சென்றவருக்கு முதல் நாளிலேயே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி மட்டுமல்ல. மிக மிக அதிர்ஷ்டமும்கூட.

கோல் மீன்கள் (Cole fishes)

ஆம், வலையில் மிக அதிக அளவிலான மீன்கள் சிக்கின. இதைக் கவனித்த சந்திரகாந்த், உடனடியாக வலையை இழுத்தார். அப்போது வலையில் சுமார் 150 மீன்கள் இருந்தன. அவருடன் சென்றவர்கள் அந்த மீன்களைப் பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஏனென்றால் அந்த மீன்கள் அதிக விலை போகக்கூடிய கோல் மீன்கள் ஆகும்.

மருத்துவ குணம் (Medicinal properties)

இந்தவகைக் கோல் மீன்கள், ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது பல்வேறு நாடுகளில் மிகவும் விலை மதிப்புமிக்கது.

இந்த மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

ரூ.1.33 கோடிக்கு ஏலம் (Auction for Rs.1.33 crore)

டாரே இந்த மீன்களுடன் கரை திரும்பியதும் அவை ஏலம் விடப்பட்டன. அப்போது, அந்த மீன்கள், சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

குரோக்கர் மீன் (Crocodile fish)

இதனை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்துச் சென்றுள்ளனர். கோல் மீன்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் ஒரு வகை கரும்புள்ளி குரோக்கர் மீன் வகையைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் புரோட்டோனிபியா டயாகாந்தஸ்.

விலை உயர்ந்த மீன் (Expensive fish)

இந்தோனேசியா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இதற்கு ஏகப்பட்ட டிமெண்ட் (Demand) உள்ளது. மிகவும் விலை உயர்ந்த கடல் மீன்களில் ஒன்றாக இது கருதப்படுவதால் இந்த மீன் தங்க மீன் என்று வர்ணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

துளசி ஒரு ஆரோக்கிய வரம்! துளசியின் 8 பெரிய நன்மைகள் இதோ!

அரசாங்க மானியத்துடன் இஞ்சி விவசாயம்! லாபம் 15 லட்சம்!

English Summary: Trapped Goldfish - Overnight Millionaire Fisherman!
Published on: 02 September 2021, 07:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now