மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 February, 2021 7:54 AM IST
Credit : POPxo

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஈரோட்டில் மஞ்சள் விலை (Tumeric) குவிண்டாலுக்கு ரூ.8,000த்தைத் தாண்டியிருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி (Farmers Happy) அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி கூறுகையில்,

தேவை அதிகரிப்பு (Increase in demand)

மஞ்சள் ஏற்றுமதி அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அதன் தேவையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.8,000த்தைக் கடந்துள்ளதால், மஞ்சள் இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

விற்பனையான விலை (Selling price)

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.6,455 முதல் ரூ.8,269வரை விலைபோனது.ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6,029 முதல் ரூ.8,264 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.5,529 முதல் ரூ.7,574 வரையும் விற்பனையானது.

அதேநேரத்தில், கர்நாடகாவில் புது மஞ்சள் வரத்தாகி உள்ளது. ஈரோடு பகுதியிலும் குறைந் அளவே மஞ்சள் வரத்தொடங்கிவிட்டது. இந்த வரத்திற்கு ஏற்ப விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் விலை கடும் வீழ்ச்சி!

காங்கேயத்தில் நாளை கால்நடைத் திருவிழா!

பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!

English Summary: Turmeric price rises to Rs 8,000 - Farmers happy!
Published on: 15 February 2021, 07:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now