மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 July, 2021 12:58 PM IST
Credit : Vikatan

கூட்டுறவுத் தொடக்க வேளாண் வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புதமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் (பட்ஜெட் தாக்கல்)

தமிழகத்தில் அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட் ஏற்கனவேத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தள்ளுபடி (Discount)

இந்த பட்ஜெட்டில் கூட்டுறவுத் தொடக்க வேளாண் வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நகை அடமானக் கடன் (Jewelry mortgage loan)

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில, மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், குறைந்த வட்டியில் தங்க நகை அடமான கடன்களை வழங்குகின்றன.

ரூ.2.64 லட்சம் கோடி கடன் (Rs 2.64 lakh crore debt)

இந்த வங்கிகள் கடந்த 2011 முதல் 2020 டிசம்பர் மாதம் வரை, 6.60 கோடி பேருக்கு 2.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, நகைக்கடன் வழங்கியுள்ளன. சட்டசபை தேர்தலின் போது தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதியாக, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

கூட்டுறவுத்துறை உத்தரவு (Cooperative Order)

இதன்படி, தி.மு.க., ஆட்சி அமைத்துள்ளது. நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை, அக்கட்சி மக்களவைத் தேர்தலின் போதும் அறிவித்திருந்தது. இதனால், கூட்டுறவு நிறுவனங்களில், 2018 - 19, 2019 - 20, 2020 - 2021 நிதியாண்டுகளில் வழங்கிய நகை கடன் விபரங்களை அனுப்பி வைக்குமாறு, கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

ஆவணங்கள்  (Documents)

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் பணிபுரியும் அதிகாரிகள், நகைக்கடன் வைத்துள்ளவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆதார் எண் மற்றும் நகைக்கடன் வைத்த போது வழங்கிய அசல் ஆவணங்களை எடுத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official announcement)

இதனால் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழக அரசின் பட்ஜெட்டில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

1500 ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் அறிவுறுத்தல்!

கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை தகவல்!

English Summary: Up to 5 razor jewelry loans at start-up agricultural banks - discounted soon!
Published on: 11 July 2021, 12:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now