மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 July, 2023 12:40 PM IST
utilizing cow urine for your plants here are some guidelines

பசுவின் சிறுநீரை (கோமியம்) உரமாக அல்லது தாவர டானிக்காகப் பயன்படுத்துவது நம்முடைய தாவரங்கள் வளர்ப்பு நடைமுறைகளில் இன்றளவும் ஒன்றாக பலர் கடைப்பிடித்து வருகின்றனர்.

தாவர வளர்ச்சிக்கும், பூச்சி போன்ற நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கோமியம் சில நன்மைகளை அளிப்பதாக நம்பப்படுகிறது. உங்கள் தாவரங்களுக்கு கோமியத்தை பயன்படுத்த நீங்கள் விரும்பினால், மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இங்கு காணலாம்.

கோமியம் சேகரிப்பு மற்றும் நீர்த்தல்:

  • ஆரோக்கியமான பசுக்களிடமிருந்து புதிய மாட்டு சிறுநீரை சுத்தமான கொள்கலனில் சேகரிக்கவும். சிறுநீரில் மற்ற அசுத்தங்கள் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • பசுவின் சிறுநீரை செடிகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன் நீர்த்துப்போகச் செய்வது அவசியம். ஒரு பங்கு பசுவின் சிறுநீரை 10 பங்கு தண்ணீருடன் கலக்க வேண்டும் என்பது பொதுவான விகிதமாகும். சிறுநீரில் ஊட்டச்சத்துக்கள் அல்லது சேர்மங்களின் அதிக செறிவு காரணமாக தாவரங்களில் எதிர்மறையான விளைவுகளைத் தடுக்க இந்த நீர்த்தல் உதவுகிறது.

பயன்படுத்தும் முறைகள்:

ஃபோலியார் ஸ்ப்ரே: மேலே குறிப்பிட்டுள்ளபடி கோமியத்தை நீர்த்துப்போகச் செய்து, இலைத் தெளிப்பாகப் பயன்படுத்தவும். கலவையை இலைகள், தண்டுகள் மற்றும் தாவரங்களின் கிளைகளில் தெளிக்கவும். இந்த முறை தாவரங்கள் தங்கள் இலைகள் மூலம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச இயலும்.

மண்ணில் இடுதல்: நீர்த்த மாட்டு மூத்திரத்தை நேரடியாக செடிகளின் அடிப்பகுதியைச் சுற்றியுள்ள மண்ணில் இடவும். இது நீர்ப்பாசனம் அல்லது மழையின் போது வேர்கள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது.

எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?

சிறிய அளவில் தொடங்குங்கள். இதனால் தாவரத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா எனத் தொடர்ந்து கண்காணியுங்கள். பொதுவாக, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துவது போதுமானதாகக் கருதப்படுகிறது.

ஏதேனும் மோசமான விளைவுகள், வளர்ச்சியின்மை போன்றவை தாவரங்களில் தென்பட்டால் மாட்டு சிறுநீர் கரைசலின் செறிவைக் குறைப்பது நல்லது.

இதையும் ஞாபகம் வச்சுக்கோங்க:

  • பச்சையாக உட்கொள்ளும் தாவரங்களின் உண்ணக்கூடிய பாகங்களில் மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம். அலங்கார தாவரங்கள் அல்லது உண்ணக்கூடிய தாவரங்களின் உண்ண முடியாத பகுதிகளுக்கு இதை பயன்படுத்தவது நல்லது.
  • இளம் அல்லது மென்மையான தாவரங்களில் மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை செறிவூட்டப்பட்ட கரைசலுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கலாம்.
  • மாட்டுச் சிறுநீரைக் கையாளும் போதும், பயன்படுத்தும் போதும் நீங்கள் கையுறைகளை அணிவது மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

மாட்டு சிறுநீர் (கோமியம்) பாரம்பரியமாக சில விவசாய நடைமுறைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தாவர உரமாக அதன் செயல்திறன் பற்றிய அறிவியல் ஆய்வுகள் குறைவாகவே உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே நீங்கள் வளர்க்கும் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்காக கோமியத்தை பயன்படுத்த விரும்பினால் வழிகாட்டுதலுக்காக அனுபவமுள்ள உள்ளூர் விவசாயிகள் அல்லது தோட்டக்கலை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுங்கள்.

மேலும் காண்க:

தக்காளி விவசாயிகள் அதிக மகசூலுக்கு இதை கண்டிப்பா செய்யுங்க !

English Summary: utilizing cow urine for your plants here are some guidelines
Published on: 05 July 2023, 12:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now