மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 November, 2021 9:04 AM IST

மழை போன்ற பேரிடர் காலங்களில், ஏற்படும் பயிர் சேதத்தை ஈடுசெய்ய பயிர் காப்பீடு மிகவும் அவசியமான ஒன்று. அவ்வாறு பயிர் காப்பீடு செய்யவதற்கு அடங்கல் தேவைப்படுகிறது.

நில அடங்கல் (Land content)

விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் , குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் நிலையில் எப்படி அடங்கல் பெறுவது நிலையில் உள்ளனர். எனவே அடங்கல் பெறுவதற்கான எளிமையான வழிமுறைகளைப் பட்டியலிடுகிறோம்.

1. ஆஜர் பட்டாதாரர் காலமாகிவிட்டால் அவரது அனைத்து ஆண், பெண் வாரிசுகள் பெயர்களை சேர்த்து அடங்கல்

2. ஆஜர் பட்டாதாரர் காலமாகிவிட்டால் அவரது அனைத்து ஆண், பெண் வாரிசுகள் நேரடியாக கிராம நிர்வாக அலுவலர் அலுவல கத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் இனங்களில் மட்டும் அவர்கள் குறிப்பிடும் வாரிசுதாரர் பெயரில் அடங்கல் வழங்கலாம்.

3.கூட்டுப்பட்டாவில் உள்ள ஆஜர் பட்டாதாரர் உயிரோடு இருந்தால் நேரடியாக கிராம நிர்வாக அலவலர் அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் இனங்களில் மட்டும் அவர்கள் குறிப்பிடும் பட்டாதாரர் பெயரில் அவர்கள் பங்கினை கணக்கீட்டு முழுமையாக, பகுதியாகவோ அடங்கல் சான்று வழங்கலாம்.


4. கூட்டுப்பட்டாவில் உள்ள ஆஜர் பட்டாதாரர்கள் மரணம் அடைந்திருந்தால் அவர்களின் அனைத்து வாரிசுகளும் நேரடியாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் இனங்களில் மட்டும் அவர்களது பங்கினை கணக்கீட்டு முழுமையாக, பகுதியாகவோ அடங்கல் சான்று வழங்கலாம்.

5. கிரையம் பெற்றுப் பட்டா மாற்றம் செய்யாத இனங்களில் பட்டா மாற்றம் செய்த பின் அடங்கல் நகல் வழங்கினால் போதுமானது.

6.குத்தகை இனங்களில் மட்டும் ஆஜர் பட்டாதாரர்களும், காலமாகி இருப்பின் வாரிசுதாரர்களும், நேரடியாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஆஜராகி அவர்களின் அனைத்து வாரிசுகளும் வாக்குமூலம் அளிக்கும் இனங்களில் மட்டும் அவர்கள் குறிப்பிடும் குத்தகைகாரர் பெயரில் அவர்களது பங்கினை கணக் கீட்டு, முழுமையாக, பகுதியாகவோ அடங்கல் சான்று வழங்கலாம்.

7. மேற்படி, ஆஜர் பட்டாதாரர்களோ, அவரது வாரிசுகளோ நேரடியாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க மறுக்கும் அல்லது தகவம் இனங்களில் அடங்கல் அனுபவ சான்று வழங்க தேவையில்லை.

8. பட்டா மாற்றம் செய்ய இயலாத மற்றும் நீதிமன்ற வழக்குகள் நிலுவையிலுள்ள இனங்களில் அடங்கல் அனுபவ சான்று வழங்கத் தேவையில்லை என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தகவல் 
அக்ரி சு.சந்திரசேகரன்,
வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை
94435 70289.

மேலும் படிக்க...

இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!

Freezer Boxல் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்த அதிசயம்!

English Summary: Ways for farmers to get land content!
Published on: 23 November 2021, 09:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now