சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 9 April, 2021 10:23 AM IST
Ways to Turn a Burning Profit into a Drum - Value Added!
Credit : Geeky.lk

வியாபாரம் என்பது ஆண்டுமுழுவதும் நமக்கு கைகொடுப்பதாக இருக்க வேண்டும். அதிலும் மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கு, உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் வகையிலானத் தொழில் செய்ய முன்வருபவரா நீங்கள்? அப்படியானால் இந்த தொழில் உங்களுக்குதான்.

சிறந்த தேர்வு (The best choice)

கவர்ச்சிகரமான லாபம் ஈட்ட, முருங்கையைத் தேர்வு செய்யலாம். விளைவிப்பதும் எளிது. மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதும் சற்றே எளிமையான விஷயம்தான்.


விவசாயத்தில் நீங்கள் சுலபமாக ஒரு ஸ்டார்ட் அப் (Start -Up ) ஆரம்பிக்க வேண்டுமென்றால் தாராளமாக நீங்கள் முருங்கையை தேர்வு செய்யலாம்.

மருத்துவ குணம் நிறைந்தது (Full of medicinal properties)

கீரை வகைகள் பொறுத்தவரை எல்லாமே சத்து மிகுந்ததுதான். ஆரோக்கியமானது என்பதுடன், மருத்துவக்குணமும் கொண்ட கீரை என்றால், அது முருங்கை மட்டும்தான்.

கீரைகள் (Greens)

விவசாயிடமும் சரி மக்களிடையேயும் சரி, அதிக வரவேற்பு பெற்றதும் முருங்கிக்கீரைதான். கீரை வகைகள் என்று பொதுவாக எடுத்துக்கொண்டால், ஒரு போகத்திற்கு மட்டும் பலன் தரக்கூடிய அரைக்கீரை முளைக்கீரை உள்ளன. சில கீரைகள் நாம் வெட்ட வெட்ட முளைக்க கூடியது உதாரணமாக பொன்னகன்னி கீரையைச் சொல்லலாம்.

ஆனால் மேல் சொன்ன இந்த இரண்டு வகை கீரைகளில் இலை மட்டுமே பிரதான விற்பனை அல்லது சாப்பிடும் பொருளாக இருக்கும். ஆனால் முருங்கை எடுத்துக்கொண்டால் பல வருடம் பலன்தரக்கூடியதாகவும், இலை, காய் மற்றும் பூக்களும் விதைகளும் கூட விற்பனை பொருளாக இருக்கும்.

எனவே அன்றாட விற்பனையுடன், முருங்கையை மதிப்பு கூட்டுப் பொருட்களாகவும் மாற்றி எளிதில் விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டலாம்.

முருங்கை இலைப்பொடி (Drumstick leaf powder)

காய் மற்றும் பூக்களை விட அதிகம் சத்து நிறைந்தது முருங்கை இலைகள்தான். இவற்றில் கரோட்டின் சத்து அதிகம் நிறைந்து இருப்பதால் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு நல்லது.
இதன் இலைகளை அரைத்து புண்களுக்கும் போடப்படுகிறது. இதன் இலைகளில் சாறு எடுத்து ஜூஸ் ஆக விற்கலாம்.

முருங்கை விதை (Drumstick seed)

விதைகள் சத்து நிறைந்ததாக உள்ளன. இதையும் பொடியாக மாற்றி விற்கலாம். முருங்கை விதை தேவை படுபவர்களுக்கு நேரடியாகயும் விற்கலாம். முருங்கை விதையில் பென் ஆயில் என்கிற எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. விதையில் 30 முதல் 35% எண்ணெய் இருக்கிறது. இது உயவு எண்ணையாக பயன்படுத்தப்படுகிறது. அழகுசாதனப்பொருட்களுக் துணை பொருளாகபயன்படுத்தப்படுகிறது.

முருங்கை காயைய் ஊறுகாய் (Drumstick pickle)

முருங்கைக்காயைப் பயன்படுத்தி ஊறுகாய் தயாரித்தும் விற்பனை செய்யலாம்.

முருங்கைக்காய் வத்தல்

PKM - 2 ரக முருங்கைக்காயில், விதை குறைவாக இருந்து சதைப்பற்று அதிகமாக இருக்கும். அதில் முருங்கைக்காய் வற்றல் தயாரிக்கலாம். குறிப்பாக முருங்கைக்காய் வரத்து அதிகமாகி விலை வீழ்ச்சி அடையும் போது மதிப்பு கூட்டி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க...

குறைந்த முதலீட்டில் மெகா லாபம் தரும் மலர் வியாபாரம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் Computer Operator வேலைக்குப் பயிற்சி- பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!

English Summary: Ways to Turn a Burning Profit into a Drumstick - Value Added!
Published on: 09 April 2021, 10:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now