மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 March, 2021 8:10 AM IST
Credit : Paperboys

தமிழகத்தில் ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திறந்த வெளி கிணறு பணி நிறைவு பெற்று சில ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், விவசாயிகள் மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் நிலை உள்ளது.

2016-17 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை சார்பில் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் தனிநபருக்கு 8 லட்சம் ரூபாய் மானியம், விவசாய குழுக்களுக்கு 12 லட்சம் ரூபாய் மானியத்தில் திறந்த வெளி கிணறுகள் 4 மீ., அகலம், 20 மீ., ஆழத்தில் அமைக்கப்பட்டது.கிணறுகள் அமைக்கப்படும் போது அதிகாரிகள் மின் இணைப்பிற்கு முன்னுரிமை கொடுத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும், என உறுதி தெரிவித்திருந்தனர்.


500 கிணறுகள் (500 wells)

இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட திறந்த வெளிகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மின் இணைப்பு இல்லை (No electrical connection)

ஆனால் மின் இணைப்பு வழங்காததால் கிணறைப் பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4 ஆண்டுகள்  (4 years)

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தெரிவித்ததாவது: விவசாயிகளுக்கு மானியத்தில் கிணறுகள் அமைத்து கொடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க தேவையான மின்சாரம் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக, அரசு மானியத்தில் கிணறு அமைக்கப்பட்டும், அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் விவசாயிகளின் நிலையைக் கருத்தில்கொண்டு, மின்சார இணைப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

ஊட்டி உருளைக்கிழங்கு - விலை வீழ்ச்சியின் பிடியில்!

ரேஷன் கடைகளில் மத்திய குழு விரைவில் ஆய்வு!

ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: Well Ready on Subsidy- When will electricity be available?
Published on: 02 March 2021, 07:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now