மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 June, 2021 11:32 AM IST

இந்த மாம்பழங்கள் ஜப்பானின் கியுஷு மாகாணத்தில் மியாசாகி நகரத்தில் வளர்க்கப்படுகின்றன.எனவே இதன் பெயர் மியாசாகி என்று அழைக்கப்படுகிறது. இந்த மாம்பழங்கள் 350 கிராம் எடையுள்ளவை மற்றும் 15 சதவீதத்திற்கும் மேல் சர்க்கரை உள்ளடக்கம் கொண்டவை.

இந்தியாவில் மிகவும் அரிதான பயிரைப் பாதுகாக்க மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தம்பதியினர் பாதுகாப்புக் காவலர்களையும், காவலர் நாய்களையும் பணியில் அமர்த்தியுள்ளனர், முதலில்  ஜப்பானில் வளர்க்கப்படும் மியாசாகி மா கன்றுகளை  ரயிலில் பணிக்கும் போது ஒரு மனிதர் தங்களுக்கு  வழங்கியதாக தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பிரபலமான மாம்பழ வகைகளை விட இந்த மாம்பழம் அதன் வித்தியாசமான தோற்றத்திற்கும் வண்ணத்திற்கும் பிரபலமானது. மத்திய பிரதேசத்தில் உள்ள தம்பதியினர் பழம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதாகக் கூறினர். இந்த மாம்பழங்களை "சூரியனின் முட்டை" (ஜப்பானிய மொழியில் டையோ-நோ-தமாகோ) என்றும் அழைக்கப்படுகிறது.

ஜப்பானில் இருந்து வரும் மாம்பழங்களின் அழகிய வகைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:

ஜப்பானில் உள்ள மியாசாகி உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் வர்த்தக மேம்பாட்டு மையத்தின் கூற்றுப்படி, இந்த மாம்பழங்கள் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.

மியாசாகி மாம்பழங்கள் உலகின் மிக விலையுயர்ந்தவையாகும், கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக ஜப்பானிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மியாசாகி என்பது ஒரு வகை "இர்வின்" மாம்பழமாகும், இது தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக வளர்க்கப்படும் மஞ்சள் "பெலிகன் மா" யிலிருந்து வேறுபட்டது என்று ஜப்பானிய வர்த்தக மையம் தெரிவித்துள்ளது.

மியாசாகியின் மாம்பழங்கள் ஜப்பான் முழுவதும் அனுப்பப்படுகின்றன, அவற்றின் உற்பத்தி அளவு ஜப்பானில் ஒகினாவாவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த மாம்பழங்களில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்திருக்கிறது மற்றும் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது, இது சோர்வடைந்த கண்களுக்கு உதவி தேவைப்படும் மக்களுக்கு சிறந்தது என்று ரேட் ஊக்குவிப்பு மையம் தெரிவித்துள்ளது.பார்வை குறைவையும் சீராக்க அவை உதவுகின்றன.

 

70 களின் பிற்பகுதியிலும் 80 களின் முற்பகுதியிலும் மியாசாகியில் மாம்பழம் உற்பத்தி தொடங்கியது என்று உள்ளூர் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நகரின் வெப்பமான வானிலை, நீண்ட நேரம் சூரிய ஒளி மற்றும் ஏராளமான மழை ஆகியவை மியாசாகியில் உள்ள விவசாயிகளுக்கு மா விவசாயம் செய்ய வழிவகுத்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியாசாகி மாம்பழங்கள் அயல் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது. மிக உயர்ந்த தரமாக கருதப்படும் மியாசாகி மாம்பழம் "சூரியனின் முட்டை" என்று அழைக்கப்படுகிறது.

இந்த மாம்பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும், எரியும் தீ வண்ணத்திலும் மற்றும் அதன் வடிவம் டைனோசர் முட்டைகளைப் போல இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

பழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

வண்டுகள் மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் ஆலோசனை

ஒரு பழத்தின் விலை ரூ.500 முதல் ரூ.1,000 வரை,மத்தியப் பிரதேசத்தின் 'நூர்ஜஹான்' மாம்பழங்கள்.

English Summary: You need to know about the most expensive type of mango in the world.
Published on: 18 June 2021, 11:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now