State

Saturday, 14 May 2022 10:37 AM , by: Poonguzhali R

கால்நடை வளர்ப்பு தற்காலத்தில் வளர்ந்துவரும் தொழில் வகையாக இருக்கின்றது. விவசாயிகள், இயல்பு மக்கள் என அனைத்துத் தர்ப்பு மக்களும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர்.

கால்நடை வளர்ப்பு எனும் நிலையில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் முதலிய வளர்ப்புகள் இருக்கின்றன. இவற்றில் ஆடு வளர்ப்பு பெரும்பாலான பகுதிகளில் அதிகமாக வளர்க்கப்படும் கால்நடையாக அறியப்படுகின்றது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் இவ்வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஆடு வளர்ப்புக்கு அரசே இலவசமாகக் கொட்டகை அமைத்துத் தருகிறது என்பது கூடுதல் நன்மை. அந்த வகையில் இலவச கொட்டகை திட்டத்தை எவ்வாறு பெறுவது என்பதைக் குறித்து இப்பதிவு விரிவாக விளக்குகிறது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆடு வளர்ப்பை முன்னெடுக்கும் நிலையில் ஆடு வளர்ப்புக்குத் தேவையான கொட்டகையைத் தமிழக அரசே அமைத்துத் தருகிறது. இந்த திட்டம் சுமார் 2014 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதி

தேவையான சான்றுகள்

  • ஆதார் அட்டை
  • வாக்காளர் அடையாள அட்டை
  • நிலத்திற்கான பட்டா
  • நிலத்திற்கான சிட்டா
  • நில அடங்கல்
  • இருப்பிடச் சான்று

செயல்முறை

  • பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் கால்நடை துறையில் கொடுக்க வேண்டும்.
  • அவர்கள் வாங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர்.
  • பின்னர் விண்ணப்பங்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்.
  • இந்த விண்ணப்பங்களுடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், ஆவின் மற்றும் கால்நடை துறை ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழுக்கள் விவசாயிகளின் இடத்திற்கு வந்து பார்வை இடுவார்கள்
  • அனைத்துச் சான்றுகளின் அடிப்படையில் உணமைத் தன்மை இருந்தால் கொட்டகை அமைக்க அனுமதி அளிக்கப்படும்.
  • விண்ணப்பித்த ஓரிரு மாதங்களில் கொட்டகை அமைத்துத் தரப்படும் எனக் கூறப்படுகிறது.

விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.

மேலும் படிக்க

ஆடு வளர்ப்புக்கு 90% மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்!!

கோழி வளர்ப்புக்கு 50,000 மானியம்! இன்றே பதிவு செய்யுங்கள்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)