மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 May, 2022 11:10 AM IST

தமிழக அரசு நாட்டுக் கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க அரசு மானியம் வழங்குகிறது. அந்த மானியத்தை எவ்வாறு பெறலாம் என்பதைக் குறித்து இப்பதிவு விளக்குகிறது.

அரசு விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கால்நடை வளர்ப்புக்கு என பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. கால்நடை வளர்ப்பில் குறிப்பிடத்தக்க வகையாக கோழி வளர்ப்பு இருக்கின்றது.

தற்போது உள்ள சூழலில் இறைச்சி அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. இறைச்சிக்கான தேவையும் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டால் அதிக லாபத்தினைப் பெறலாம். அதிலும் குறிப்பாக நாட்டுக் கோழி என்றால் அதிக அளவில் விற்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, அரசு தரும் மானியத்தினைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறும் நாட்டுக்கோழி வளர்ப்பை மேற்கொள்ளலாம்.

நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க 25% மானியத்தினை தமிழக அரசு வழங்குகிறது. அடுத்த 25% மானியமானது, நபார்டு வங்கியின் சார்பில் மானியமாக வழங்கப்படுகிறது. ஆக, 50% மானியம் அரசு சார்பாகவே வழங்கப்படுகிறது. மீதமுள்ள 50% தொகையை வங்கியில் கடனாகப் பெற்றுக் கொண்டு பண்ணைகளை அமைக்கலாம்.

மானியம் பெறத் தகுதி

விவசாயிகள், தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் அல்லது தனிநபர் இந்த மானியத்தைப் பெறலாம்.
கோழிப் பண்ணை அமைக்கும் அளவிற்குப் போதிய நிலம் உள்ள அனைவரும் இம்மானியத்திற்குத் தகுதி உடையவர்கள் ஆவர்.

புதியவராக இருந்தால் பயம் இல்லை

நீங்கள் இதுவரை கோழிப் பண்ணைக் குறித்த முன் அனுபவம் பெறாமல் இருந்தாலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு உள்ள புதிய விண்ணப்பதாரர்களுக்கு அவரவர் மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியிலிருந்து ஒரு ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றைப் பெற வேண்டும். அதன் பின், அஇந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பெற்றுப் பூர்த்திச் செய்து கொடுக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்

ஆதார் கார்டு
வங்கி கணக்குப் புத்தகம்
குடும்ப அட்டை
100 நாள் வேலைவாய்ப்பு அட்டை
நில உரிமை பத்திரம்
குடியிருப்புச் சான்று
சாதிச் சான்று
புகைப்படம் 2

இந்த மானியம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. அதோடு, அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

மேலும் படிக்க

ஆடு வளர்ப்புக்கு 90% மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்!!

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாங்க மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்!!

English Summary: 50,000 subsidy for poultry farming! Register today !!
Published on: 13 May 2022, 11:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now