மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 February, 2023 2:32 PM IST
Cosmetology and Hairdressing Training with Job Opportunity by TAHDCO

நாகப்பட்டினம் மாவட்டத்தினை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு தாட்கோ மூலம் 100 சதவீத வேலை வாய்ப்புடன் கூடிய அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் பயிற்சி முடித்தவர்கள் சுயத்தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கான சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் (Maha Family Salon and Spa International Training Academy) மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology and Hair Dressing) தாட்கோ சார்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள், சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படித்திட பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) முழுமையாக தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சியினை முடிக்கும் மாணாக்கர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டினால் (NSDI-National Skill Development of India) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி பெற்றவர்கள் 100 சதவீத வேலை வாய்ப்பு பெறும் வகையில் தனியார் அழகு நிலையங்களில் (Gayathri Hair and Skin Salon, RKS Beauty Parlour, Natural and Body Craft) பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை பெறலாம். மற்றும் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 இலட்சம் மானியத்துடன் கூடிய 10 லட்சம் வரையிலான கடனுதவி வழங்கப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் தாட்கோ இணைய தள ( www.tahdco.com ) முகவரியில் விண்ணப்பிக்கவும்.

கூடுதல் விவரம் தேவைப்படுவோர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திலும், 04365-250305 என்ற தொலைபேசியிலும் மற்றும் 9445029466 என்ற கைப்பேசியிலும் தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

ஒரு லட்சம் பரிசு- பசுமை சாம்பியன் விருது பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

English Summary: Cosmetology and Hairdressing Training with Job Opportunity by TAHDCO
Published on: 27 February 2023, 02:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now