அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 June, 2023 11:01 AM IST
good news for tirupathur farmers- subsidy details of drip irrigation

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாசன பணிகளுக்காக சொட்டு நீர் பாசன முறையினை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மவாட்டத்தில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கு 1400 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கபட்டு 11.42 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சொட்டு நீர் பாசனம் அல்லது நுண்ணீர் பாசனம் என்பது முதன்மை குழாய், துணைக்குழாய்கள் மற்றும் பக்கவாட்டு குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோ வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும்.

நீராதாரம் குறைந்து வருவதாலும், சாகுபடி நிலப்பரப்பு குறைந்து வருவதாலும் வாழும் மக்களுக்கு உணவு அளிக்க உற்பத்தித் திறனை அதிகரித்து தரமான உணவு விளைவிப்பை பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கிடைக்கும் நீரை கொண்டு வேளாண்மையில் நீடித்த நிலையான வருவாய் பெற வேண்டிய அவசியமான நிலையில் உழவர்கள் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு துளி நீரையும் வீணாக்காது உணவு உற்பத்திக்குப் பயன்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமே நுண்ணீர் பாசனம் என்னும் சொட்டு நீர் பாசன திட்டம் ஆகும்.

75 முதல் 100 சதவீத மானியம்:

சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே சொட்டு நீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் கடந்திருந்தால், உபகரணங்கள் மாற்றிக்கொள்ள மீண்டும் மானியம் வழங்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெற வேண்டும். ஆர்வமுள்ள விவசாயிகள் தேவையான ஆவணங்களான சிட்டா, அடங்கல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்புக் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன்,இ,ஆ,ப., தெரிவித்துள்ளார்.

ஆலங்காயம் வட்டாரம் – 9043493204, ஜோலார்பேட்டை மற்றும் நாட்றம்பள்ளி வட்டாரம் 9095880813, மாதனூர் வட்டாரம் 8825794936, கந்திலி வட்டாரம் -8838517900 மற்றும் திருப்பத்தூர் வட்டாரம்-7339165526.

மாறிவரும் காலநிலை மாற்றத்தினால் நீருக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர் பாசன முறைக்கு மாற வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

pic courtesy: YANmar tractor

மேலும் காண்க:

மாரடைப்புக்கும்- திங்கட்கிழமைக்கும் என்ன லிங்க்? உஷார் மக்களே

English Summary: good news for tirupathur farmers- subsidy details of drip irrigation
Published on: 17 June 2023, 11:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now