மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 March, 2023 4:37 PM IST

கோவையில் மார்ச் மாதம் 4 ஆம் தேதி தொடங்க உள்ள மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சியில் பங்கேற்று தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய விருப்பமுள்ள சுய உதவிக் குழுவினர் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய, மண்டல, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கண்காட்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அவற்றில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யவும் வாய்ப்புகள் வழங்கி வருகிறது.

ஆனால் இது போன்ற கண்காட்சிகள் நடைபெறும் தகவல் மற்றும் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு ஒரு சில மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தற்போதும் சென்றடையா சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலையை போக்க ஏதுவாக கண்காட்சிகள் நடைபெறும் விவரம் மற்றும் கண்காட்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்ய ஏதுவாக இணைய வழிப் பதிவு (Online Registration) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் 04.03.2023 முதல் 12.03.2023 வரை நடைபெற உள்ள மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகள் https://exhibition.mathibazaar.com/login என்கிற இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் மேலாண்மை இயக்குநர்/ முதன்மை செயல் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர்கள் பொருளதார வகையில் மேம்பட கிராம, நகர்ப்புறங்களிலுள்ள பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் கண்காட்சி நிகழ்வினை நடத்தி வருகிறது. முன்னதாக மாநில அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற கண்காட்சிகளில் பங்கேற்கும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களது உற்பத்தி பொருட்களான துணி வகைகள், சணல் பொருட்கள், மூலிகை தொடர்பான உற்பத்தி பொருட்கள், குளியல் பவுடர், வலி நிவாரணி, பூஜை பொருட்கள், மசாலா மற்றும் சிறுதானிய உணவு பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள், கைவினை பொருட்களை ஆகியவற்றை காட்சிப்படுத்தி விற்பனையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர்,பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

உலை கொதிக்குமா இனி? வீட்டு, வணிக சிலிண்டரின் விலை கிடுகிடு உயர்வு

English Summary: regional level SARAS exhibition held at coimbatore from march 04
Published on: 01 March 2023, 12:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now