வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 26 January, 2021 4:12 PM IST
Credit : Youtube

நன்கு சமைக்கப்பட்ட கோழி மற்றும் முட்டையில் இருந்து, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாது என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம், ஹரியானா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், டில்லி, ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில், பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்

காகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வரும், பறவைகள் மூலம், 'ஏவியன் இன்ப்ளுயன்ஸா' எனப்படும், பறவைக்காய்ச்சல் பரவியிருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இதில், ஒன்பது மாநிலங்களில், பண்ணைக் கோழிகளுக்கும், இந்த நோய் பரவியிருப்பதை, மத்திய அரசு, உறுதி செய்துள்ளது. இதையடுத்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., (FSSAI)எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது: முழுமையாக நன்கு சமைக்கப்பட்ட, கோழி மற்றும் முட்டையில் இருந்து, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை.

பாதுகாப்பு விதிமுறைகள்

நன்றாக சமைக்கப்பட்ட இறைச்சியில் இருந்து தொற்று பரவாது.
முட்டைகளை பாதி வேகவைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கோழி இறைச்சியை கையாளும், சில்லரை வர்த்தகர்களும், அதை வீடுகளில் வாங்கி சமைப்பவர்களும், சில பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது மிக மிக அவசியம்.

  • பறவைக் காய்ச்சல் தொற்று உள்ள பகுதியில் வசிப்போர், பறவைகளை கைகளால் தொட்டு பழகுவதை தவிர்க்கவும்.
  • கோழி இறைச்சியை வெறும் கையால் தொடுவது கூடாது. 
  • கையுறைகள் மற்றும் முகக்கவசம் அணிந்தே, கோழி இறைச்சிகளை கையாள வேண்டும்.
  • இறைச்சியை திறந்தவெளியில் வைக்க கூடாது.
  • பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து, கோழி மற்றும் முட்டைகள் வாங்கக் கூடாது.
  • வீடுகளில் கோழிகளை வெட்டும் போது, கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து கொள்வது பாதுகாப்பானது.
  • மேலும், கோழியை சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள், கத்தி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், சமையலுக்கு பின், கிருமி நாசினி வாயிலாக நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
  • கோழி இறைச்சியை, நேரடியாக குழாய் நீரில் காட்டி கழுவக் கூடாது. இறைச்சியில் பட்டு தெறிக்கும் நீர் துளிகள் வாயிலாக, தொற்று பரவும் வாய்ப்புள்ளது.
    இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

மூளையை பாதிக்கும் சர்க்கரை! ஆய்வில் தகவல்!

English Summary: Are you going to cook chicken? Be the first to read this!
Published on: 26 January 2021, 04:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now