Health & Lifestyle

Monday, 11 April 2022 09:25 PM , by: Elavarse Sivakumar

தினமும் வேகவைத்த ஆப்பிளை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும். அதுமட்டுமல்லாமல், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து விலகித் தற்காத்துக்கொள்ளவும் ஆப்பிள் உதவுகிறது.

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் போகத் தேவையில்லை என்பார்கள். அந்த ஆப்பிளை வேகவைத்துச் சாப்பிட்டால், எக்கச்சக்க நன்மைகள் இருக்கிறது என்பது நம்மில் எத்தனைபேருக்குத தெரியும். உண்மை விவரங்களைத் தெரிந்துகொள்வோம். வேகவைத்த ஆப்பிள் உடல் பருமன், இதயம், நீரிழிவு ஆகியவற்றைக் குறைப்பதற்கும் மனதைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

எடை குறையும்

எடை இழப்புக்கு வேகவைத்த ஆப்பிளை உட்கொள்ள வேண்டும். இதில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலில் இருந்து எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். வேகவைத்த ஆப்பிளை காலை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

இதயம் நோய்

வேகவைத்த ஆப்பிள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பயனுள்ளதாக இருக்கும். வேகவைத்த ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். உண்மையில், இதில் உள்ள பண்புகள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன, இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

இருமல் வராது

இருமல் பிரச்சனை இருந்தால் வேகவைத்த ஆப்பிளை சாப்பிட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

குடல்புழு நீங்கும்

இது தவிர, வேகவைத்த ஆப்பிள் குடல்புழுக்களிலிருந்து நிவாரணம் பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைந்தது 7 நாட்களுக்கு தினமும் வேகவைத்த ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல்புழுப் பிரச்சனை அடிச்சுவடு இல்லாமல் அழிந்தே போகும்.

சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க

வேகவைத்த ஆப்பிள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் நுகர்வு உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்பதைக் கண்கூடாகக் காண முடியும்.

மேலும் படிக்க...

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)