Health & Lifestyle

Tuesday, 04 May 2021 08:13 AM , by: Elavarse Sivakumar

Credit : Maalaimalar

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லோசான அறிகுறி இருந்தால், சிடி-ஸ்கேனைத் தவிர்ப்பது நல்லது என எய்ம்ஸ் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

சிடி ஸ்கேன் (CD-scan)

கொரோனா வைரஸ் ஒரு நபரைத் தாக்கியதும், அவரது நுரையீரலைத்தான் அதிகமாக பாதிக்கும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது.

பாதிப்பைக் கண்டறிய (To diagnose vulnerability)

இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு, சிடி-ஸ்கேன் எடுக்கப்பட்டு நுரையீரல் மற்றும் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் சிகிச்சை அளிக்கப்படும்.

தவிக்கும் இந்தியா (Suffering India)

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வருவதால் மருத்துவமனைகளில் நிரம்பியுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அறிகுறி இல்லை ( No symptoms )

அறிகுறியில்லாத கொரோனா வைரஸ் தாக்குதல், லேசான அறிகுறிகளுடன் உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள் உறுப்புகள் பாதிப்பு (Damage to internal organs)

நோயாளிகளும் உள் உறுப்புகளில் பாதிப்பு உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள சிடி-ஸ்கேனை அதிக அளவில் நாடுகின்றனர். பொதுவாக சிடி-ஸ்கேன் உள் உறுப்புகளை தெள்ளத்தெளிவாக படம் பிடிக்கும் என்பதால் பொதுமக்களும் அதற்கு பயப்படுவதில்லை.

மருத்துவர் எச்சரிக்கை (Doctor alert)

இந்த நிலையில் சிடி-ஸ்கேன் மிகவும் ஆபத்தானது என்று எய்ம்ஸ் மருத்துவமனை டைரக்டர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விளைவுகளை ஏற்படுத்தும் (Causing effects)

சிடி-ஸ்கேன் குறித்து டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில் சிடி-ஸ்கேன் மற்றும் பயோமேக்கர்ஸ் ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு லேசான அறிகுறி இருக்கும் என்றால், சிடி-ஸ்கேன் செய்வதால் எந்த லாபமும் இல்லை. ஒருமுறை நீங்கள் சிடி-ஸ்கேன் எடுத்தால் அது 300 மார்பக-எக்ஸ்ரேவிற்கு சமமானது. இது அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

மேலும் படிக்க...

தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!

கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க 8 பள்ளிகள் ஒப்படைப்பு- ஈஷா நடவடிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)