Health & Lifestyle

Tuesday, 22 March 2022 11:26 AM , by: Elavarse Sivakumar

உணவுக்கு நறுமணத்தை அள்ளிக்கொடுக்கும், ஏலக்காய் ஆஸ்துமா நோயாளிகளுக்கு அருமருந்தாகப் பலனளிக்கிறது. இதுமட்டுமல்ல, ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், பல நன்மைகளைப் பெறலாம்.
ஏலக்காய் என்றாலே, அதன்மணமும், சுவையும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் ஏலக்காய், சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. 

ஏலக்காய் ஊட்டச்சத்துக்களின் புதையல் ஆகும். அதில் இருந்து பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது வாய் துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமின்றி சளி-இருமல், செரிமான பிரச்சனைகள், வாந்தி மற்றும் சிறுநீர் பிரச்சனைகளை நீக்குகிறது. ஏலக்காயில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. இது உடலில் சாதாரண இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. கடந்த சில வருடங்களாக ஏலக்காய் பல நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுவதற்கு இதுவே காரணம். அதுமட்டுமின்றி, ஏலக்காய் மூலம் உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்றவற்றையும் குறைக்கலாம்.

தாகம் தீர்க்கும்

ஏலக்காயில் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், ஆயுர்வேதத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.போதுமான அளவு தண்ணீர் குடித்த பிறகும் நீங்கள் தாகத்தால் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஏலக்காய் உங்களுக்கு நிறைய உதவும். ஆயுர்வேதத்தின் படி, ஏலக்காய் வயிறு மற்றும் வாயு பிரச்சனைகளைப் போக்க மூன்று மடங்கு பண்புகளைக் கொண்டுள்ளது.

அதாவது, இருமல் மற்றும் வாயு போன்ற குறைபாடுகளை நீக்குகிறது. இது செரிமான அமைப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, வயிற்று உப்புசம் பிரச்சனையையும் நீக்குகிறது. இது வயிறு மற்றும் நுரையீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏலக்காயின் சுவை சூடாக இருக்கும். இது உடலில் இருக்கும் ஏனைய நச்சுகளையும் நீக்குகிறது.ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகிறது.

அஜீரணம், சிறுநீர் தொற்று மற்றும் பல நோய்களையும் குணப்படுத்துகிறது. ஏலக்காயை தினமும் தேநீரில் எடுத்துக் கொள்ளலாம். உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஏலக்காய் டீ குடிக்கலாம்.

மேலும் படிக்க...

நெல் மூட்டைகளை அடகு வைத்து கடன்- சாமர்த்தியமாகச் சுருட்டிய விவசாயி!

அன்னை வைஷ்ணவ தேவி உருவம் பதித்த நாணயம் - லட்சாதிபதி ஆக வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)