நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 November, 2022 10:05 AM IST
Drink this juice to ward off diabetes!

இன்றைய நிலையில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது. இந்நிலையில், மூன்று காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் காய்கறி ஜூஸ் குடிப்பதால் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை கிடைப்பதோடு, பல நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். இதை எப்படி தயாரிப்பது மற்றும் எந்த நேரத்தில் சாப்பிடுவது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

பாகற்காய், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவை அன்றாடம் வீட்டில் பயன்படுத்தப்படும் சில காய்கறிகளில் அடங்கும். இந்த காய்கறிகள் அனைத்திலும் சத்துக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த மூன்றும் சாலட் வடிவில் மிகவும் விரும்பப்படுகிறது. பாகற்காய், வெள்ளரி மற்றும் தக்காளி ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜீஸ்ஸைக் குடிப்பது ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது என்பது அனைவரும் அரிய வேண்டிய ஒன்றாகும்.

புரதம், நார்ச்சத்து, சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் பாகற்காயில் இருக்கின்றன. இந்த மூன்றின் ஜூஸை எவ்வாறு செய்யலாம், குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

பாகற்காய், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவை நீரிழிவு அல்லது ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பாகற்காய், வெள்ளரி மற்றும் தக்காளி சாறு குடிக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் சாப்பிடுங்கள். இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

இந்த மூன்றின் சாறு, மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து. பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காயில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் உணவை எளிதில் ஜீரணிக்கும். இது தவிர, குடல்களை சுத்தப்படுத்த உதவுகிறது. இந்த சாறு வயிற்றை சுத்தம் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சளி, இருமல் போன்ற நோய்கள் குளிர்காலத்தில் மிகவும் பொதுவானவை. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஜூஸை குடிக்கலாம். வைட்டமின் சி தக்காளியில் நல்ல அளவில் காணப்படுகிறது. அதனால்தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் உதவுகிறது. மேலும், அடிக்கடி சளி தொல்லை ஏற்பட்டு வந்தால், இந்த சாற்றை தினமும் சாப்பிடுங்கள்.

பாகற்காய், வெள்ளரி மற்றும் தக்காளி சாறு தயாரிக்க, முதலில் பாகற்காய் தோலை நீக்கவும். அதன் பிறகு வெள்ளரி மற்றும் தக்காளியை மெல்லியதாக நறுக்கி, இந்த மூன்றையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்க்க வேண்டும். இப்பொழுது அதன் சாறு எடுத்து வடிகட்டி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

Weather: வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

வல்லாரை பயிரிடும் முறைகளும் அதன் பயன்களும்!

English Summary: Drink this juice to ward off diabetes!
Published on: 21 November 2022, 10:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now