மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 January, 2021 9:36 PM IST
Credit : Vikatan

சிறுநீரக பிரச்சினையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சிறுநீரகத்தில் கற்கள் (Kidney stone) உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

நன்னாரி வேர்

வீடுகளில் மண்பானையில் நீர் ஊற்றி நன்னாரி வேர், வெட்டி வேர், விளாமிச்சை வேர் போன்றவற்றை போட்டு அருந்தினால் குடல், வயிறு, சிறுநீரகம் (Kidney) தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

வாழைத்தண்டு

வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்.

அன்னாசிபழம்

அன்னாசிபழத்தில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின் (Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளதால் இதை சாப்பிடலாம்.

கொள்ளு

கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை என்பதால், தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சரியான உணவு முறையைப் பயன்படுத்தி உண்பதால், சிறுநீரகம் மட்டுமல்ல எந்த நோயும் நம்மை அண்டாது. "நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்" என்பதை உணர்ந்து நல்உணவை சரிவிகித அளவில் உண்ண வேண்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மூளையை பாதிக்கும் சர்க்கரை! ஆய்வில் தகவல்!

English Summary: Fantastic 4 Tips for People With Kidney Problems!
Published on: 28 January 2021, 09:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now