மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 June, 2021 7:33 AM IST
Credit : Ulavar santhai

திண்டுக்கலில் இந்தோ - இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தின் சார்பில் முதல் முறையாக சோதனை முயற்சியில் கோகோ செடி கன்று நடவு செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் இந்தோ - இஸ்ரேல் தொழில்நுட்ப காய்கறி மகத்துவ மையம் இயங்கி வருகிறது.

இலவச நாற்று (Free seedling)

இதில் பல வகையான காய் கனிகள் உயர் தொழில்நுட்ப முறைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட காய்கனி விதைகளை நடவு செய்து அவைகளை வளர்த்து அந்த நாற்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

பசுமைக் குடில் (Green house)

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாகச் சோதனை முயற்சியில் கோகோ விதைகளைப், பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் இருந்து வாங்கி வந்து இந்தோ - இஸ்ரேல் உயர் தொழில்நுட்ப முறையில் அவற்றினை பசுமைக் குடில் மூலம் பாதுகாத்தனர்.

பின்னர் நடவு செய்து 3 மாத கோகோச் செடிக் கன்றுகளை வளர்த்து தற்போது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளனர்.

கோகோ பயிர் (Cocoa crop)

பொதுவாகவே கோகோ பயிர் அதிக வெப்பம் இல்லாத மிதமான குளிர் சூழலில் வளரக்கூடிய நிழல் பயிராகும்.

3 பகுதி விவசாயிகளுக்கு (For 3 area farmers)

இந்த கோகோ கன்றுகளை கொடைக்கானல், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

எனவே இந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, உங்கள் பகுதியில் உள்ள வேளாண் அலுவலகம் மூலம் தோட்டக் கலை பண்ணையில் இலவசமாக கோகோ கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

நில ஆவணங்களுக்கு ஏற்ப (According to land documents)

வேளாண் அலுவலகத்தில் முன்பதிவு செய்திருக்கும் விவசாயிகளுக்கு அவர்களின் நில ஆவணங்களை சரிபார்த்து விவசாய நிலத்திற்கு ஏற்றவாறு கோகோக் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ள தாக இந்தோ - இஸ்ரேஸ் மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தகவல் 

ஐயப்பன்

இளநிலை ஆராய்ச்சியாளர்,

காய்கனி மகத்துவ மையம்.

மேலும் படிக்க...

பழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

வண்டுகள் மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் ஆலோசனை

ஒரு பழத்தின் விலை ரூ.500 முதல் ரூ.1,000 வரை,மத்தியப் பிரதேசத்தின் 'நூர்ஜஹான்' மாம்பழங்கள்.

English Summary: Free cocoa plant seedlings for farmers!
Published on: 20 June 2021, 07:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now