Health & Lifestyle

Sunday, 06 March 2022 08:53 AM , by: Elavarse Sivakumar

ஒருவருக்கு நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் என வழக்கத்தில் கூறப்படுவது வந்துவிட்டால், அவர்கள் எந்தப் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இதனால் பழங்களைச் சாப்பிட முடியாதவர்களாக மாறிவிட்டோமே என சர்க்கரை நோயாளிகள் வேதனைப்படுகின்றனர். உண்மை அதுவல்ல. இத்தகைய நோயாளிகள் சாப்பிட வேண்டியப் பழங்கள் என சிலப் பழங்கள் உள்ளன.

நமது உணவுகளில் மஞ்சள் நிறம் கொண்ட உணவுகள் ஏராளமாக உள்ளன. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து வருவதைக் கட்டுக்குள் வைத்திருக்க, மஞ்சள் நிற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவைக் கொண்ட, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவும் குறைவாக இருக்கும் இதுபோன்ற பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்று நம்பப்படுகிறது.இவை இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும்.

மஞ்சள் நிற உணவுகள்

பூசணி

பூசணி இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் நிற பூசணி நார் ஆக்ஸிஜனேற்றத்தின் புதையல் ஆகும். இதை உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். பல நாடுகளில், பூசணிக்காய் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது. பூசணிக்காயில் பாலிசாக்கரைடுகள் எனப்படும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

எலுமிச்சை

இது தவிர நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை நன்மை பயக்கும். எலுமிச்சை தண்ணீர் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மஞ்சள் நிற கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இது தவிர, மஞ்சள் நிற கேரட் மிகவும் நன்மை பயக்கும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண்பார்வைக்கு உதவுவதாகவும், வைட்டமின்கள் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. இதில் நாம் பட்டாணி சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க...

பழிவாங்கிய பல்- அறுவைசிகிச்சைக்கு ஆசைப்பட்ட Brush!

இவற்றைத் தவிர்க்காவிட்டால் வழுக்கை ஏற்படுவது உறுதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)