நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 January, 2023 7:00 PM IST
Idly Chutney: Sesame chutney for hot idly! Here is the recipe!!

இட்லி,தோசை போன்றவற்றிக்கு பூண்டு சட்னி,கார சட்னி,தேங்காய் சட்னி,சாம்பார் என்று செய்து அலுத்து விட்டதா உங்களுக்கு? கொஞ்சம் மாற்றி, சுவையாக, புதுமையாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அப்போ இந்த சட்னியை செய்யலாம்.

தேவையான பொருட்கள்
எள்ளு - 1/4 கப்
பூண்டு - 4 பற்கள்
தேங்காய் - 1/2 கப்
இஞ்சி - 1 துண்டு
உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
வரமிளகாய் - 7
புளி - 1 லெமன் சைஸ்
கடுகு-1 /2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

செய்முறை வருமாறு:

  • தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • இஞ்சி மற்றும் பூண்டு பற்களை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய வைத்தல் வேண்டும்.
  • எண்ணெய் சூடான பிறகு, எள்ளு விதைகளை சேர்த்து தீயினை சிம்மில் வைத்து வதக்கி விடுதல் வேண்டும்.
  • எள் வதங்கி நன்றாக வாசனை வந்த பிறகு, அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விடுதல் வேண்டும்.
  • இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பின்பு,புளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.
  • அதன்பிறகு வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி கடாயை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு குளிர செய்யதல் வேண்டும்.
  • கடாயில் இருக்கும் கலவை நன்றாக ஆறிய பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுதல் வேண்டும்.

சூடான சுவையான எள்ளுச்சட்னியை நீங்களும் செய்து பாருங்கள்.

மேலும் படிக்க

சிறுநீரகக் கற்களை கரைக்க இயற்கையான ஐந்து எளிய வழிகள்! 

Ration Card: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணேய்! புதிய தகவல்!!

English Summary: Idly Chutney: Sesame chutney for hot idly! Here is the recipe!!
Published on: 08 January 2023, 07:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now