Health & Lifestyle

Monday, 05 June 2023 05:54 PM , by: Poonguzhali R

If you know about aloe vera, you will never leave!

ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் வளரும் கற்றாழை, ஆப்பிரிக்கா நாட்டினை தாயகமாக கொண்டுள்ளது. இந்தியாவில் கற்றாழை மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் அதிகம் சாகுபடி ஆகிறது. சேலம் மற்றும் தூத்துக்குடியில் கற்றாழை அதிகம் பயிரிடப்படுகிறது.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை, எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. கற்றாழையின் மருத்துவ குணங்கள் பலவிதமானவை.

கற்றாழையின் நன்மைகள்:

  • தலையில் உள்ள பொடுகு, வறட்சி தன்மை, புண், ஆகியவை நீங்கி கூந்தல் வளர உதவுகிறது.
  • கற்றாழையுடன் சிறிது என்ன சேர்த்து தடவினால் தலைமுடி வெடிப்பு குறைந்து முடி நன்கு வளர உதவும்.
  • கற்றாழையை நன்கு சுத்தம் செய்து அதனை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள், கண் கருமை, சுருக்கம், முகத்தில் வறட்சி, முகத்தில் என்னை தன்மை, அனைத்தும் நீங்கிவிடும்.
  • கற்றாழையை சுத்தம் செய்து அதை உடலில் கருமை அடைந்திருக்கும் கைகள், கால்கள், முட்டிகள், கழுத்து, விரல்கள், ஆகிய பகுதிகளில் தேய்த்து வர கருமை நீங்கி சருமம் பளபளக்கும்.
  • கற்றாழையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெப்பம் நீங்கி உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழையை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வழிகள், மற்றும் வயிற்றுப்போக்கு, வாயுவு , ஆகியவை சீராகும்.
    மனிதர்களுக்கு பல காரணங்களால் அவர்களின் உடலில் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடிய அபாயம் உள்ளது.
  • இந்த கொடிய செல்களை அளித்து உடலுக்கு ஆரோகியத்தை கொடுக்கும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு.
  • எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க, மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கற்றாழையை மருத்துவ உணவாக பயன்படுத்துவது நல்லதாகும்.

நீரிழிவு இருப்பவர்கள் தினமும் யை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்துவிடும் என்று ஆராய்ச்சியின் கண்டு பிடிப்பில் உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏத்த கோடைக்கால உணவுகள்!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ட்ராகன் பழம்! இப்பவே தெரிஞ்சிக்கோங்க!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)