Health & Lifestyle

Sunday, 24 April 2022 02:41 PM , by: Poonguzhali R

Is it dangerous for the stomach if these are mixed with milk?

பாலுடன் அமிலம் நிறைந்து உள்ள பழங்களான, ஆரஞ்சு, எலும்பிச்சை, தர்பூசணி முதலானவைகளும், முள்ளங்கி போன்ற காய்கறிகளும், துளசி போன்ற இலைகளும் என இவை அனைத்தும் பாலுடன் இணைத்து உண்ண தகுந்த உணவுப் பொருட்கள் அல்ல.

பால் என்று பார்த்தால், பால் அதிகக் கொழுப்பு, புரதம் நிறைந்த உணவு. தர்பூசணி போன்ற பழங்களைச் சாப்பிட்டு ஒரே நேரத்தில் பால் குடித்தால், அதில் உள்ள அமிலம், பாலில் உள்ள புரதத்தைப் பிணைக்கும். பால் பின்னர் தயிராக புளிப்பு நிலையை அடையும். இந்த உணவுக் குழுக்களை ஒன்றாக உட்கொண்ட பிறகு இதுவே உடல்நிலை சரியில்லாமல் போவதற்குக் காரணமாகவும் அமையும்.

மிகவும் ஆபத்தான உணவு கலவையானது சிட்ரஸ் பழங்களுடன் பால் சேர்த்து உண்பதாகும். தர்பூசணிகள் என்று பார்த்தால் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.ஆனால் இவை இரண்டும் முற்றிலும் ஒன்று சேராதவை. அதாவது, தர்பூசணி ஒரு சிட்ரஸ் சுவை கொண்டது. அதே நேரத்தில் பால் இனிப்பு சுவை கொண்டது. இதன் விளைவாக, அவற்றை சேர்ப்பது செரிமான பிரச்சினைகள் மற்றும் வயிற்றில் நச்சுத்தன்மையை உருவாக்கலாம். எனவே தர்பூசணி உள்ளிட்ட சிட்ரஸ் பழ வகைகள் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

ஆயுர்வேதத்தின்படி, பால் ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது. சிட்ரஸ் பழங்கள் டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த எதிரெதிர் செயல்களின் விளைவாக உடலில் உள் நடைபெறும் செயல்பாடுகளில் மோதல் ஏற்படுகிறது.
பாலையும் பழங்களையும் கலப்பது தவறான யோசனை என்று ஏன் நினைக்கிறார்கள் என்றால், தர்பூசணி என்பது மனித உடலால் எளிதில் ஜீரணிக்கக்கூடிய ஒரு உணவுப் பொருள். அதோடு, எளிய சர்க்கரைகளைக் கொண்ட வைட்டமின் நிறைந்த பழமாகும். தர்பூசணி குறிப்பாக அமிலப் பழம் இல்லை என்றாலும், அதில் சிட்ருலின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இதில் காணப்படும் Citrulline, ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும் என்று கருதப்படுகிறது.

பழங்கள் மற்றும் பால் தனித்தனியாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்று பார்த்தால், தர்பூசணி மற்றும் பால், முன்பு கூறியது போல், தனித்தனியாக உட்கொள்ளும் போது மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள். தர்பூசணி வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் சிட்ரூலின் அமினோ அமிலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த உதவும் திறனுக்காக சிட்ருலின் பயன்படுகிறது. இந்த பயன்பாடு எல்லோராலும் நன்கு அறியப்பட்டதாகும். எலும்புகள் மற்றும் தசைகளை வலிமைப்படுத்த பழங்களை உட்கொள்ளலாம். ஆரஞ்சு, எலும்பிச்சை தர்பூசணி சாறு கோடையில் உட்கொள்ளும் போது ஒரு சிறந்த டிடாக்ஸ் பானமாகும். இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது.

மேலும் படிக்க

100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் ஃபெர்டிகுளோபல் டிரான்ஸ்ஃபார்மிங் உர உற்பத்தி

இயற்கை வேளாண்மை பற்றிய முப்பது நாள் சான்றிதழ் பயிற்சி: அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)