மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 September, 2021 3:20 PM IST
Improper Sleep

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒரு விஷயம் என்பது மறுக்க முடியாதது. நம் அடுத்த கட்ட நகர்வுக்கும், அடுத்த கட்ட சுறுசுறுப்புக்கும் ஓய்வு ஒன்று அடிப்படையான விஷயம் ஆகும். அதிலும், மனிதர்களுக்கு ஓய்வு மிகவும் அவசியமானது. மனிதர்களின் ஓய்வு தூக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது . ஆனால், தற்போதைய யுகத்தில் யாரும் சரியான நேரத்தில் தூங்குவது இல்லை.

பலரும் ஓய்வு என்பது வீணானது, பயனற்றது மற்றும் உற்பத்தித் திறனை பாதிக்கிறது என்று நினைத்து வருகின்றனர். ஆனால், அதேநேரத்தில் அதிக அளவு ஓய்வு எடுத்துக் கொள்வதும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தின் தலைமையிலான புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இதுகுறித்த, ஆய்வு சமூக உளவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், ஓய்வு நேரத்தை குறைவாக அனுபவித்த மக்கள், அதிக அளவு மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரத்தில், குறைவாக ஓய்வு கொண்டவர்கள் குறைந்த அளவிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஓய்வு எடுத்துக் கொள்வது அதிக அளவு மனநல நன்மைகளைக் கொண்டுள்ளது என்றாலும், அதிக அளவு ஓய்வு எடுத்துக் கொள்வது மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடும்.

இது குறித்த ஆய்வில், 199 கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். ஆய்வில் அவர்களின் பொழுதுபோக்கு நிகழ்வுகள், மகிழ்ச்சி, மனச் சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற விஷயங்கள் அளவிடப்பட்டன. அதேநேரத்தில் அவர்களின் ஓய்வு நேரமும் கணக்கிடபட்டன. ஆனால், இது போன்ற ஓய்வு நேரங்கள் பெரும்பாலும் வீணாக செலவிடப்படுகின்றன.

அதிக ஓய்வு கூட உயர் ரத்த அழுத்தத்துடன், அதிக மன அழுத்தத்தைத் உருவாகக்கூடும். முறையற்ற அதிக ஓய்வினால் உயர் இரத்த அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக துக்கமின்மை ஏற்படுவது மட்டுமல்லாமல், அலர்ஜி போன்றவை ஏற்படும். இதனால் மன அழுத்தம் ஏற்படுவதோடு, மாரடைப்பு ஏற்படவும் அதிகளவில் வாய்ப்புள்ளது.

பலரும் ஓய்வு என்பதை பார்ட்டி மற்றும் பப்புகளில் செலவிடைவதையே ஓய்வு என்று கருதுகிறார்கள். இது தவறான எண்ணமாகும். ஓய்வு எடுத்துக் கொள்வது உடலுக்கு மட்டுமின்றி, நமது மூளைக்கும் தேவைப்படும் ஒரு விஷயம். சரியான பல வழிகளில் கூட நீங்கள் உங்களின் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தலாம். உடற்பயிற்சி, யோகா, தியானம், மனமகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றில் கூட நேரத்தை செலவிடலாம்.

மேலும் படிக்க:

ரம்புட்டானின் 11 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

உடலில் இரத்தத்தை அதிகரிக்க 5 முக்கிய உணவுகள்!

English Summary: Is it dangerous to rest too much? Shocking news!
Published on: 02 September 2021, 03:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now