நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 January, 2023 1:38 PM IST
Moringa water helps to fix sugar!

முருங்கை இலைகள் உடலுக்கு மிகுந்த பலன்களை அளிக்கிறது. மேலும், மலேரியா, காய்ச்சல், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ஒட்டுண்ணி நோய்கள் மற்றும் பல நோய்களைப் போக்க உதவுகின்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் முருங்கைக்காய், முருங்கை கீரை, முருங்கை பூ உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. மோரிங்கா ஓலிஃபெரா தாவரத்திலிருந்து முருங்கை வருகிறது. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பரவலாகப் பயிரிடப் படுகின்றது. வட மேற்கு இந்தியாவில் அதன் தோற்றம் இருக்கிறது. முருங்கை இலைகளின் சில நன்மைகள் கீழே ஒவ்வொன்றாகக் கொடுக்கப்படுகின்றன.

இதயத்திற்கு நல்லது: முருங்கை இலைகள் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டு இருக்கின்றன. இதனால் இதய நோய் அபாயத்தினைக் குறைக்கிறது. “முருங்கை துத்தநாகத்தின் சிறந்த மூலமாகும். அதோடு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அதோடு, இது நீரிழிவு நோயை நிர்வகிக்க அல்லது தடுக்கவும் உதவும் எனக் கூறப்படுகிறது.

ஆரோக்கியமான சருமத்தினை வழங்குகிறது. முருங்கை இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் அதிகம் இருப்பதால் முருங்கை இலைகள் சருமப் பராமரிப்புக்கு ஏற்றதாக இருக்கின்றது.

தூக்கத்தினை மேம்படுத்த உதவுகிறது. தினமும் உட்கொள்ளும் உணவின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து மதிப்பினை அதிகரிப்பது ஒரு சிறந்த உணவு, மேலும் அதிக தூக்கம் தருகின்றது. தூக்கம் மற்றும் ஊட்டச்சத்து இரண்டும் ஒன்றுக்கொன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனை கட்டுப்படுத்த முருங்கை இலைகள் போன்ற சக்திவாய்ந்த உணவுகள் அவசியம். அவை ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றன. வைட்டமின்கள் மூலம் உடலை சுத்தப்படுத்துகின்றன மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

செரிமானத்திற்கு ஏற்றதாக அமைகிறது. முருங்கை இலைகளை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளுக்கு உதவும். அல்சரேட்டிவ் கோலிடிஸ், இரைப்பை அழற்சி, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்கள் முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

முருங்கை இலை தேநீராக பருகலாம். முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது ஆகும். அவை அதிக கலோரி உணவுகளுக்கு சிறந்த மாற்றாக அமைகின்றன. இவை கொழுப்பு சேமிக்கப்படுவதை விட ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. முருங்கை தேநீர் தயாரிக்க, இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

முருங்கைப் பொடியாகச் செய்து உண்ணலாம். இந்த பொடியைப் பெரும்பாலும் தோசை, இட்லி மற்றும் பலவற்றுடன் பரிமாறப்படுகிறது. இது பொதுவாகப் பல்வேறு பருப்புகள், பூண்டு மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த உலர் மசாலா அடிப்படை உணவுகளுக்கு ஒரு தனித்துவமான சுவையைச் சேர்க்கின்றது. இதேபோன்று செய்முறையில் பத்து மடங்கு நன்மையுடன் முருங்கை கீரைப் பொடி, முருங்கை இலைப் பொடி தயார் செய்து உட்கொண்டால் நல்ல பலன் அளைக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

1000 ரூபாய் முதலீடு செய்தால் போதும்! 1 கோடி சேமிப்பு பெறலாம்!!

வேகமாக பரவும் பறவை காய்ச்சல்! தமிழக மக்களே உஷார்!!

English Summary: Moringa water helps to fix sugar!
Published on: 10 January 2023, 04:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now