மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 April, 2022 2:53 PM IST
One item is enough! Your white hair will darken!!

கடைகளில் கிடைக்கக் கூடிய ஹேர் டை-களைப் பயன்படுத்தினால் முடி குறுகிய நேரத்தில், குறுகிய காலத்திற்கு மட்டும் கருமையாக மாறும். ஆனால், அவற்றில் உள்ள கெமிக்கல்கள் முடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்கின்றன. அதாவது, முடி உதிர்வை அதிகமாக்குகின்றன. தலையில் அரிப்புத் தன்மையை அதிகமாக்கிப் பொடுகு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. இவ்வகையான பிரச்சனைகளிலிருந்து விடுபட இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட ஹேர் ஆயிலையும், ஹேர் டை-யையும் பயனபடுத்துவதே சிறந்த தீர்வாக அமையும்.

தேவையான பொருட்கள்

சுத்தமான தேங்காய் எண்ணெய் - 450 மி.லி.
நெல்லிக்காய் பொடி - 100 மி.கிராம்.

ஹேர் டை-செய்முறை

முதலில் ஒரு இரும்புக் கடாய்-ஐ எடுத்துக் கொள்ளவும். 50 மில்லி அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய், 2 டீஸ்பூன் அளவுக்கு நெல்லிக்காய் பொடியைச் சேர்த்து, அடுப்பை மீடியம் ஃப்ளேம்-இல் வைத்து நன்றாக கலந்து விட வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் இந்த நிலையில் நன்றாக கலந்து விட வேண்டும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு, நெல்லிக்காய் பொடி கலந்த தேங்காய் எண்ணெயை அடுப்பிலிருந்து எடுத்து வேறு பாத்திரத்தில் ஊற்றி நன்கு ஆர வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

தலையில் எண்ணெய் எதுவும் அப்ளை செய்யாமல் இந்த நெல்லிக்காய் எண்ணெயை முடியின் வேர்க்கால்கள் மற்றும் முடியின் நுனி வரை அப்ளை செய்ய வேண்டும். ஒரு மணிநேரம் கழித்து மைல்டான ஷாம்பூ-வைப் பயன்படுத்தித் தலைக்குக் குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். இதே போன்று தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நரை முடி, வெள்ளை முடி, செம்பட்டை முடி ஆகியன கருமையான முடியாக மாறும். இது ஒரு இயற்கையான ஹேர்டை ஆகும். இது நிரந்தரமாக நமது முடியைக் கருமையாக மாற்றக்கூடிய ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அதோடு, வேர்க்கால்களிலிருந்து இனி வளரும் முடிகளும் கருமையானதாக வளருகின்றன.

இதே நெல்லிக்காய் பொடியைப் பயன்படுத்தி ஒரு ரெஹுலர் ஹேராயில்-உம் செய்யலாம். இதையும் அதனோடு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கருமையான முடியைப் பெறலாம்.

ஒரு 400மில்லி அளவுக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டால், 50 மில்லி கிராம் அளவுக்கு நெல்லிக்காய் பொடியை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து காய்ச்சி, ஆரவைத்து, வடிக்கட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வைப் பெறலாம்.

மேலும் படிக்க

கோடையில் அதிக மகசூலைத் தரும் பன்னீர் ஆப்பிள்!

பூசணிக்காயில் இவ்வளவு நன்மைகளா?

English Summary: One item is enough! Your white hair will darken!!
Published on: 27 April 2022, 02:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now