Health & Lifestyle

Thursday, 08 July 2021 05:17 PM , by: Sarita Shekar

Skin care

Skin Care Tips: 

கோடையில் முகத்தில் பருக்கள் மாசு மற்றும் வியர்வை காரணமாக, வெளியே வரத் தொடங்குகின்றன. பருக்கள் முகத்தின் அழகைக் கெடுக்கின்றன. பருவைத் தவிர்க்க பெண்கள் பல முறைகளைப் பின்பற்றுகிறார்கள். அறிந்தோ அறியாமலோ, இந்த முறைகள் சில நேரங்களில் உங்களுக்கு மிகவும் ஆபத்தாக முடியலாம். பெரும்பாலும் பெண்களால் பயன்படுத்தப்படும் இந்த முறைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பற்பசை (Toothpaste)

பருக்கள் நீங்க, பல பெண்கள் பருக்கள் மீது தூத்பேஸ்ட்டை பயன்படுத்துகிறார்கள். அதன் பயன்பாடு மிகவும் ஆபத்தாக முடியலாம். தூத்பேஸ்ட்டைப் பயன்படுத்துவதால் முகத்தில் எரிச்சல் ஏற்படலாம் மேலும் சில சமயங்களில் காயங்கள் கூட ஏற்படலாம். தூத்பெஸ்ட்டில் எண்ணெய், பேக்கிங் சோடா, மெந்தோல் மற்றும் ஹைட்ரஜன் அதிகம் காணப்படுகின்றன.

பேக்கிங் சோடா (Baking soda)

முகப்பருவைப் போக்க பெண்கள் முகத்தில் பேக்கிங் சோடாவை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இது சருமத்திற்கு மிகவும் ஆபத்தானது. பேக்கிங் சோடாவின் பயன்பாடு சருமத்திற்கு நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது.

பூண்டு (Garlic)

பூண்டை நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவது சருமம் சிவந்து எரிய கூடிய வாய்ப்புகள்அதிகம் காணப்படும். இது முகத்தில் கொப்புளங்கள் மற்றும் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். அதிகப்படியான முடி உதிர்தலின் போது கூட பல முறை மக்கள் வேர்களில் பூண்டு விழுது பயன்படுத்துகிறார்கள். இது தலையில் உள்ள தோலில்  எரிச்சலை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க:

ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும், நோய் தீர்க்கவும் தாமரை- எண்ணற்றப் பலன்கள்!

நோய்களில் இருந்து தப்பிக்க, வேப்பிலை ஒன்று போதும்!

பாக்குத் தோலை நீக்க வந்துவிட்டது உபகரணம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)