சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 30 August, 2022 3:22 PM IST
Super seeds to help you lose weight!

உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது, பலரையும் வாட்டி வதைக்கும் பிரச்னையாக உருமாறி வருகிறது. அவ்வாறு, அதிகரித்து வரும் எடையைக் குறைக்க நாம் கடுமையாக முயற்சி செய்கிறோம். 

ஆனால் பல சமயங்களில் இதற்கான தீர்வு நம் சமையலறையிலேயே இருக்கிறது. அதுதான் ஆளி விதைகள்.எடையைக் குறைக்க மேற்கொண்டப் பலவித முயற்சிக்கு பலன் கிடைக்காத பட்சத்தில், அத்தகைய சூழ்நிலையில் வேறுபட்ட புதிய விதமான ஏதாவது முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது. 

டைட்டாக மாறும் ஆடைகள்

வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு அதிகரிக்கும் போதெல்லாம், உங்கள் ஆடை டைட்டாக மாறும், இதனால் நீங்கள் சங்கடத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தப் பிரச்னை தீர, ஆளிவிதையின் அதிசய குணங்கள் நிச்சயம் உதவி செய்யும். நாம் ஆளி விதைகளைத் தொடர்ந்து உட்கொண்டால், அதிகரித்து வரும் எடையை எளிதில் குறைக்கலாம்.

ஃபைபர் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆளிவிதையில் ஏராளமாக காணப்படுகின்றன. இது புற்றுநோய் போன்ற நோய்களிலும் நன்மை பயக்கும். இந்த விதைகளை முறையாக உட்கொண்டால் ஆரோக்கிய நன்மைகள் நிச்சயம் கிடைக்கும்.

பசியின்மை

பொதுவாக ஆளி விதை எடை தளர்வான உணவு என்றும் அழைக்கப்படுகிறது. 100 கிராம் ஆளிவிதையில் சுமார் 18 கிராம் புரதம் உள்ளது. அதேபோல் மசிலேஜ் எனப்படும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. இதன் காரணமாக நீண்ட நேரம் பசியின்மை இருக்காது, இதன் காரணமாக எடை படிப்படியாக குறையத் தொடங்குகிறது. எனவே தினமும் விதைகளை சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.

எப்படி சாப்பிடுவது?

ஆளி விதைகளில் பழுப்பு மற்றும் மஞ்சள் என 2 வகைகள் உள்ளன, இவை இரண்டில் சத்தான கூறுகள் உள்ளது. இதை சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக சத்துள்ள தேநீராக, பானமாக மாற்றிப் பருகலாம். அப்படிப் பருகினால், நீங்கள் எதிர்பார்க்கும் பலன் நிச்சயம் கிடைக்கும்.

செய்முறை

  • நீங்கள் சாப்பிட விரும்பினால், விதைகளை சூடான கடாயில் வறுக்கவும்,

  • பின்னர் அதை அரைத்து தூள் வடிவில் செய்துக்கொள்ளலாம்.

  • இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் ஆளி விதை பொடியை கலக்கவும்.

  • இப்போது தண்ணீரைக் கொதிக்க வைத்து, இந்த தண்ணீர் வெதுவெதுப்பானதும் குடிக்கவும்.

  • நீங்கள் அதன் சுவையை மேலும் அதிகரிக்க விரும்பினால், வெல்லம் மற்றும் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து அருந்தலாம்.

தகவல்
டாக்டர் ஆயுஷி யாதவ்
பிரபல உணவியல் நிபுணர்

மேலும் படிக்க...

தமிழக இளைஞர்களுக்கு வேலை- சென்னையில் சிறப்பு முகாம்!

வெறும் 750 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும்!

English Summary: Super seeds to help you lose weight!
Published on: 30 August 2022, 03:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now