Health & Lifestyle

Sunday, 27 November 2022 04:35 PM , by: Poonguzhali R

Try making hot delicious "Idli Manchurian"!


இட்லி மீதம் இருந்தால் கவலைப்பட வேண்டாம். அதனை இட்லி மஞ்சூரியனாகச் செய்து சாப்பிடலாம். இட்லியை விரும்பிச் சாப்பிடாதவர்கள் கூட சூடான இட்லி மஞ்சூரியனை விரும்பிக் கேட்டுச் சாப்பிடுவார்கள். அதை எவ்வாறு செய்யலாம் என்பதைக் குறித்து இப்பதிவு விளக்குகிறது.

சுமார் வெறும் 10 நிமிடத்தில் இதனை செய்து விடலாம். சுவையும் அருமையாக இருக்கும். இதை எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

மீந்த இட்லி – 4

சீரகம் – 1/4 ஸ்பூன்

தக்காளி – 1

வெங்காயம் – 1

கேப்ஸிகம் – 1/2

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்

சோயா சாஸ் – 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

மல்லித் தூள் – 1/2 ஸ்பூன் 

கறிவேப்பிலை- 1 கொத்து 

மல்லித்தழை-1 கொத்து 

எண்ணெய் -தேவையான அளவு 

உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • மீதம் இருக்கும் இட்லிகளை சிறிய அளவில் ஒரே விதமான வடிவங்களில் கத்தியால் வெட்டிக் கொள்ளுதல் வேண்டும்.
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, கேப்ஸிகம் மற்றும் மல்லித்தழை முதலிவற்றை பொடியாக அரிந்து எடுத்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்த பின்பு, வெட்டி வைத்துள்ள இட்லிகளை எண்ணெயில் போட்டு,
  • இது பொன்னிறமாக ஆன பின் எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் தனியாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • அதன் பின்னர், கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • சீரகம் பொரிந்து முடிந்த பின் அதில் பொடியாக அரிந்த பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, வெங்காயம் முதலியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
  • அது வதங்கிய பின்பு,அதில் கேப்ஸிகம் சேர்த்து வதக்கி விட்டு, பின் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து ,தக்காளி மசியும் வரை வதக்குதல் வேண்டும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர், சோயா சாஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இரண்டு நிமிடங்கள் வதக்கி விட்டு, பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள் மற்றும் உப்பு முதலியவற்றைச் சேர்க்க வேண்டும்.

மசாலாவில் இருக்கும் காரத் தன்மை போனதும் பொரித்து எடுத்து வைத்துள்ள இட்லி துண்டுகளைச் சேர்த்து கொஞ்சம் கலந்து விட்டு, 2 நிமிடங்கள் வதக்கி விட வேண்டும். இறுதியாக மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான இட்லி ரெடியாகி விடும்.

மேலும் படிக்க

ஊட்டியாக மாறப்போகும் திருப்பூர்; மகிழ்ச்சி தகவல்!

TNEB: 100 யூனிட் இலவச மின்சாரம்! வெளியான புதிய அறிவிப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)