மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 October, 2020 3:20 PM IST
Credit : Dinamani

தீபாவளிப் பண்டிகை (Diwali) வரவிருக்கும் நிலையில், விளக்குகளை ஏற்றி வைக்க மாட்டுச் சாணத்தில் (Cow sung), அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர் ஜெய்ப்பூரைச் (Jaipur) சேர்ந்த பெண்கள். மாசில்லா தீபாவளிக்குத் தயாராகும் வகையில், மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி அகல் விளக்குகளை, தயாரிக்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் (Environment) மாசடைவதை தடுக்க இயலும். மேலும், பெண்களுக்கான புதிய வேலைவாய்ப்பும் உருவாகியுள்ளது.

இயற்கைப் பொருட்களின் பயன்பாடு:

பண்டிகை காலங்களில், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், இரசாயனத்தைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் (Ministry of Environment) முதல் சமூக அமைப்புகள் வரை வலியுறுத்தி வருகின்றன. நவராத்திரி மற்றும் வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு, இயற்கை முறையில் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி, அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர் ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள்.

தூய்மையான மாட்டுச் சாணம்:

பாரம்பரிய மண் விளக்குகளைத் தவிர, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்படும் இதுபோன்ற விளக்குகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) உள்ளூர் தயாரிப்புகளின் முயற்சியாகவும், இந்த அகல் விளக்கு இருக்கும் என இப்பெண்கள் கூறியுள்ளனர். மேலும், எங்களது பாரம்பரிய மாட்டுச் சாணம் தூய்மையானது (Clean). ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், 1000-க்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை தயாரிக்கின்றனர். பண்டிகைகளைக் கொண்டாட, உள்ளூர்த் தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்தினால், இயற்கையும் காக்கப்படும் மற்றும் எங்களது வாழ்வாதாரமும் மேன்மை அடையும் என்று கூறியுள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கறவை மாடுகளில், பால் உற்பத்தியை அதிகரிக்க சில யுக்திகள்!

கொழுப்பைக் குறைக்க தினமும் சாப்பிடுங்கள் பிஸ்தா!

English Summary: Wide lights in cow dung! Pollution-free Diwali is ready!
Published on: 21 October 2020, 03:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now