மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 May, 2022 3:17 PM IST
World Hypertension Day: Some Myths and Facts!

உலக உயர் இரத்த அழுத்த தினம் 2022: உலக உயர் இரத்த அழுத்த தினம் வரும் மே 17 ஆகும். உயர் இரத்த அழுத்தம் சார்ந்து, இயல்பாக உள்ள உண்மைக்கு வெகு தொலைவில் உள்ள நோயைப் பற்றிய பல கட்டுக்கதைகளை மக்கள் நம்புகிறார்கள். உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் ஒரு பொதுவான நிகழ்வாக ஒதுக்கித் தள்ளப்படுகிறது. மேலும் பிரச்சனை சமாளிக்க முடியாத அளவிற்கு மோசமடையும் வரை மக்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளாத ஒரு போக்கைக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற பல கட்டுக்கதைகள், நம் மனதிலிருந்து நீக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று உலக உயர் இரத்த அழுத்த தினத்தை அனுசரிக்கும்போது, பிரபலமான உயர் இரத்த அழுத்தத்தை முறியடிக்க வேண்டும் என உறுதி கொள்ள வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு பொதுவானதுதான். அது உடலின் தமனி சுவர்களுக்கு எதிரான இரத்தத்தின் நீண்ட காலச் சக்தியாகும், இறுதியில் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இரத்த அழுத்தம் இதயத்தால் பம்ப் செய்யப்படுவதால், இரத்த நாளங்களின் (தமனிகள்) சுவர்களுக்கு எதிராக அழுத்தும் சக்தியால் இரத்த அழுத்தம் உருவாக்கப்படுகிறது. அதிக அழுத்தம், இதயம் பம்ப் செய்ய கடினமாக உள்ளது. காலப்போக்கில் உயர் இரத்த அழுத்தம் இருப்பது இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். 4 ஆண்களில் ஒருவர் எனும் எண்ணிக்கையிலும் 5 பெண்களில் ஒருவர் எனும் எண்ணிக்கையிலும் இரத்த அழுத்தம் பிரச்சனையை கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நிலையைக் கொண்டுள்ளனர்.

உடல் ஆரோக்கிய ஆலோசகர் மற்றும் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் அனுப் ஆர் தக்சாண்டேவிட், உயர் இரத்த அழுத்தம் சார்ந்த சில கட்டுக்கதைகளையும் அதன் உண்மை கருத்தையும் விளக்குவதை இப்பதிவு விரிவாக விளக்குகிறது.

கட்டுக்கதை 1: உயர் இரத்த அழுத்தம் ஒரு பொதுவான ஒன்று; கவலைக்குரிய விஷயம் அல்ல.

உண்மை: இப்போதெல்லாம், உயர் இரத்த அழுத்தம் பெருகிய முறையில் பொதுவானது, ஆனால் உயர் இரத்த அழுத்தத்திற்கு உடனடி கவனம் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகம், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் போன்ற முக்கிய உறுப்புகளைச் சேதப்படுத்தும். மேலும் திடீர் மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்குக் கூட, இது வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தம் ஒரு அமைதியான கொலையாளி. நோயாளிகளின் அதிக இறப்பு மற்றும் நோயுற்ற விகிதங்களுக்கு வழிவகுப்பதாகவும், இரத்த அழுத்தம் இருக்கிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்றாற் போல உடலை உயர் இரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்க வேண்டும்.

கட்டுக்கதை 2: உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பது சாத்தியமில்லை.

உண்மை: இந்த கூற்றுத் தவறானது. உயர் இரத்த அழுத்தம் ஒரு வாழ்க்கை முறை நோய் என்றாலும், அதை வராமல் உடலை அரோக்கியமாக வைத்திருக்க முடியும். உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க, ஒருவர் ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க வேண்டும். மேலும் புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றைக் கொண்ட நன்கு சமநிலையான உணவை உண்ண வேண்டும். காரம், எண்ணெய் மற்றும் பதம் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். யோகா, தியானம் செய்வதன் மூலம் உடலின் உப்பு அளவை குறைக்கவும். அதோடு, மன அழுத்தத்தை குறைக்கவும். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை நிறுத்துவதும் உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்க உதவும்.

கட்டுக்கதை 3: உயர் இரத்த அழுத்தம் முக்கியமாக மூத்த வயதானவர்களில் காணப்படுகிறது

உண்மை: உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் முதியோர் பிரச்சனையாகவோ அல்லது வயதானவர்களுக்கு உடல்நலக் கவலையாகவோ கருதப்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில் உயர் இரத்த அழுத்தம் எந்தவொரு நபரிடமும் எந்த நேரத்திலும் காணப்படலாம் என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளைப் பின்பற்றுபவர்களை விட, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

கட்டுக்கதை 4: ஒருவர் இரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக் கொண்டால், அவர் உடற்பயிற்சி செய்யாமலோ அல்லது ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றாமலோ இருந்தால் பரவாயில்லை.

உண்மை: இது முற்றிலும் உண்மை இல்லை. நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்குக் கொண்டு வருவதற்கும் வாழ்க்கை முறை நடவடிக்கைகள் போதாது என்பதால், மருத்துவர் இரத்த அழுத்த மருந்துகளை உள் எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்.

கட்டுக்கதை 5: இரத்த அழுத்த எண் அளவு குறைந்தால், மருந்து உட்கொள்வதை நிறுத்தலாம்.

உண்மை: இல்லை, உண்மையில், மருத்துவரின் பரிந்துரையின்படி தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு, வழக்கமான பின்தொடர்தல்களுக்குச் செல்ல வேண்டும். உயர் இரத்த அழுத்தம் வாழ்நாள் முழுவதும் ஒரு நிலை ஆகும். எனவே, நீங்கள் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தினால், இரத்த அழுத்தம் மீண்டும் உயரும். மருந்துகளைத் திடீரென நிறுத்துவது ஒரு மோசமான யோசனை என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் சார்ந்து கருத்துக்களைக் கூறும் பல ஆலோசகர்கள், இந்த இரத்த அழுத்தம் வராமல் தடுத்தும், வந்த இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்தும் இயல்பான அரோக்கியமான வாழ்வைப் பெறலாம் என அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் படிக்க

தண்ணீர் காலாவதியாகுமா? காலாவதியான தண்ணீரைக் குடிக்கலாமா?

கோடையில் கண்களைப் பராமரிப்பது எப்படி?

English Summary: World Hypertension Day: Some Myths and Facts!
Published on: 11 May 2022, 03:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now