நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 February, 2021 10:17 AM IST
Credit : rice

நெல் அறுவடை செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கடலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு, தனியார் இயந்திர உரிமையாளர்கள்,அமைப்பினர் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வந்துள்ளன.

ஆலோசனைக் கூட்டம் (Consultative meeting)

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகள், தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் வேளாண் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாடகை நிர்ணயம் (Rent determination)

கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், பெல்ட் டைப் (Belt Type) தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக ரூ.1800 முதல் ரூ.2.100 வரையும், டயர் டைப் (Tyre Type)இயந்திரங்களுக்கு ரூ.1,300 முதல் ரூ.1,500 வரையும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்போது பெரும்பாலான பகுதிகளில் அறுவடை நடைபெற்று வருவதால், அரசு நிர்ணயித்த வாடகைக்கு மிகாமல் விவசாயி களிடமிருந்து வசூலிக்கப்படுவதை கண்காணிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மேலும் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க...

மா மரங்களைத் தாக்கும் கற்றாழைப்பூச்சி- பாதுகாக்க யோசனை!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!

நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்வு - சிக்கலில் விவசாயிகள்!

English Summary: Action if rent-extra charge for harvesting machines!
Published on: 13 February 2021, 10:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now