Horticulture

Monday, 21 June 2021 10:33 PM , by: Elavarse Sivakumar

ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்காக, காளான் வளர்ப்பு பற்றிய இணையவழிக் கருத்தரங்கம் இன்று நடைபெறுகிறது.

பயிற்சி பெற வாய்ப்பு (Opportunity to train)

இதில் அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டுப் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பல நன்மைகள் (Many benefits)

உடல் நலத்திற்கு வித்திடும் உணவுகளில் காளானும் ஒன்று. பல நன்மைகளை அளிக்கும் காளானை வளர்த்து விற்பனை செய்தவதன் மூலம் நல்ல வருமானமும் ஈட்ட முடியும். குறிப்பாக விவசாயிகள் இதைப் பகுதிநேரப் பணியாகவும் மேற்கொண்டுப் பயனடையலாம்.

இணையவழி கருத்தரங்கம் (Online Seminar)

இதனைக் கருத்தில்கொண்டு, காளான் வளர்ப்பு குறித்த இணையவழிக் கருத்தரங்கம், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று காலை நடைபெறுகிறது

இந்தக் கருத்தரங்கில், அனைத்து விவசாயிகளும் இணையதளம் மூலம் கலந்துகொள்ளலாம்.

நடைபெறும் நாள் (The day of the event)

இன்று(ஜூன் 22)

நேரம் (Training time)

காலை 11 மணி முதல் பகல்1.00 மணி வரை

விவாதிக்கப்படும் தலைப்புகள் (Topics discussed)

இந்தக் கருத்தரங்கத்தில் இலாபகரமான காளான் வளர்ப்பு- சாதகங்களும், சவால்களும் என்றத் தலைப்பில் எல்லிஸ் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.எஸ்.அரவிந்த் தொழில்நுட்ப விளக்கவுரை ஆற்றுகிறார்.

விஞ்ஞானிகள் பங்கேற்பு (Participation of scientists)

இதில் MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் டாக்டர். பி.அழகேசன் துவக்க உரை ஆற்றுகிறார். ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி.பி. தமிழ்செல்வி அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.

விருப்பமுள்ளவர்கள் இணையம் மூலம் இணைந்து பயிற்சி பெற்றுக்கொண்டுப் பயனடையலாம்.

Join with Zoom Meeting

கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
https://us02web.zoom.us/j/6689229190?pwd=eVBiU1RaZHZ6eThvb3lqd0FaT1JGZz09#success
Meeting ID : 668 922 9190 Passcode : 2HMfYF

இணைந்து ஏற்பாடு (Arranged together)

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் , MYRADA வேளாண் அறிவியல் நிலையமும், இணைந்து இந்த இணையவழி கருத்தரங்கம் மற்றும் பயிற்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

தர்பூசணி விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: தஞ்சை கலெக்டர் பேட்டி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)