மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 December, 2020 10:33 AM IST

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கட்செவி அஞ்சல் (Whats-app) மூலம் வேளாண் பற்றிய ஆலோசனைகள் பெறவும், புகாா்களை தெரிவிக்கவும் செல்போன் எண் (Cellphone Number) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வசதிக்காக கட்செவி அஞ்சலில் வேளாண் தகவல் பெற செல்போன் எண் (Cellphone Number) அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இதன் மூலம், விவசாயம் சாா்ந்த புகாா்கள் (Complaints), திட்டங்கள், தொழில்நுட்ப செய்திகள், பயிற்சிகள் குறித்த தகவல்களை தாமதமின்றிப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • இது தவிர கால்நடை வளா்ப்பது தொடா்பான சந்தேகங்கள், தோட்டக்கலைத் துறை பயிா்கள் சாகுபடியில் உள்ள தொழில்நுட்பங்கள், மீன்வளா்ப்பு குறித்த தொழில் நுட்பங்கள், பண்ணை இயந்திரங்கள் குறித்த விவரங்கங்களையும் உடனுக்குடன் பெற முடியும்.

  • விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள விளைபொருள்களை விற்பனை செய்யத் தேவையான வசதிகள் பெறுவது, விளைப்பொருள்கள் விலை போன்ற விவசாயம் சாா்ந்த தகவல்களை 94889 93077 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் (Whats-app) பெறலாம்.

இந்த எண்ணில் பெறப்படும் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், விவசாயிகளுக்கு தேவைப்படும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

English Summary: Cellphone Number Notice to Get Agricultural Information in Katchevi Mail!
Published on: 27 December 2020, 10:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now