1. விவசாய தகவல்கள்

PM-Kisan : 9 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் -ரு.2000 - பிரதமர் மோடி விடுவித்தார்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
PM-Kisan: Prime Minister Modi has released Rs 2,000 assistance to 9 crore farmers.

9 கோடி விவசாயிகளுக்கு, PM-kisan'  திட்டத்தின் கீழ் 7-வது தவணையான தலா 2,000 ரூபாய் உதவித்தொகையை, பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

பிரதமரின் 'கிசான்' திட்டத்தின் கீழ்(Pradhan Mantri Kisan Samman Nidhi), சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தலா, 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணம், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டின் 7-வது தவணையாக, ஒன்பது கோடி விவசாயிகளுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய் இன்று விடுவிக்கப்பட்டது.

உதவித்தொகை வழங்கும் பணிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' ( Video Conference ) மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணிக்கு துவங்கி வைத்தார். ஒரு பொத்தானை அவர் அழுத்தியவுடன், 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி, பரிமாற்றம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, 6 மாநில விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது, கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) மற்றும் அதன் மூலம், குறைந்த வட்டியில் கடன் பெறும் வசதிகள் பற்றி, விவசாயிகளிடம் விளக்க வேண்டும் என்றார்.பிரதமர் தனது உரையில் 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள், மத்திய அரசின் உதவி திட்டங்கள், விவசாயிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு செய்யப்படும் உதவிகள் போன்றவை பற்றி விரிவாக பேசினார். இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் விவசாயிகள் காணொலி மூலம் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தெளிவாக விளக்கம் அளிக்கும் வகையில் பிரதமரின் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உங்கள் பெயர் மற்றும் கட்டண நிலையை சரிபார்க்க

பட்டியல், விண்ணப்பம் மற்றும் கட்டண நிலைகளில் உங்கள் பெயரைச் சரிபார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.
முதலில், பிரதமர் கிசான் சம்மன் நிதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் - https://pmkisan.gov.in/.
"Dashboard" என்று சொல்லும் இணைப்பைக் கிளிக் செய்க. நீங்கள் அதைக் கிளிக் செய்யும் போது, ஒரு புதிய பக்கம் திறக்கும்.

இங்கே நீங்கள் மாநில, மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் கிராமத்தை நிரப்ப வேண்டும்.
பின்னர் "Show" என்பதை கிளிக் செய்க.இதன் பின் உங்கள் கிராமத்தில் எத்தனை விவசாயிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், எத்தனை தவணைகளைப் பெறுகிறார்கள் அல்லது யாருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது போன்ற அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள்.

கட்டண நிலையை நீங்கள் காண விரும்பினால், Payment Status என்பதைக் கிளிக் செய்க. இங்கே நீங்கள் முழுமையான பட்டியலைப் பெறுவீர்கள்.
நேரடியாக பட்டியலை சரிபார்க்க..இங்கே கிளிக் செய்யவும்

FTO is Generated and Payment confirmation is pending என்றால் என்ன?
பிரதமர் கிசான் இணையதளத்தில் உங்கள் நிலையைச் சரிபார்க்கும்போது FTO is Generated and Payment confirmation is pending என்று ஒரு செய்தியைக் கண்டால், இதன் பொருள் விவசாயிகள் கொடுத்த விவரங்களை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது, பணம் விரைவில் உங்கள் கணக்கில் மாற்றப்படும். FTO என்றால் Fund Transfer Order என்று அர்த்தம்.

மேலும் படிக்க...

மழையால் வெளியேறும் உரஇழப்பைத் தடுக்க - நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்!!

வீட்டிலேயே எலுமிச்சை வளர்க்க எளிய டிப்ஸ்!

TNAUவின் புதிய ரகங்கள், ஒட்டுரகங்கள் - காணொளிக் கண்காட்சி மூலம் வணிகமயமாக்கல்!

 

English Summary: PM-Kisan: Prime Minister Modi has released Rs 2,000 assistance to 9 crore farmers. Published on: 25 December 2020, 06:47 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.