Horticulture

Saturday, 14 May 2022 08:09 PM , by: Elavarse Sivakumar

அண்மை நாட்களாகவே அதிகரித்துவந்த பஞ்சு ஒரு கேண்டியின் விலை தற்போது லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. இவ்வாறு பஞ்சு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கோவை, திருப்பூர் ஜவுளித் துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களில் முக்கியமானப் பயிர் என்றால் அது பருத்திதான். பருத்தியில் இருந்து பிரித்தெடுக்கும் பஞ்சானது ஜவுளி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய ஜவுளி தொழில் கட்டமைப்பில் மூன்றில் ஒரு பங்கை தமிழகம் கொண்டுள்ளது.

வேலைவாய்ப்பு

பஞ்சாலைகள் மூலம் தமிழகத்தில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இத்தகைய சூழலில் ஜவுளி தொழில் மற்றும் அதன் சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் பஞ்சு விலை ஏற்றத்தால் தற்போது கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

356 கிலோ பஞ்சு கொண்ட ஒரு கேண்டி (Candy) பஞ்சு விலை சமீபத்தில் 80,000 முதல் 95,000 ரூபாய் வரை அதிகரித்தது. இந்த விலை உயர்வு ஒட்டுமொத்த ஜவுளி தொழில்களையும் முடக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜவுளி தொழில் துறையினர் ஒன்றிணைந்து மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீத வரியை நீக்கி,  மத்திய அரசும் அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஆனால் தற்போது பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து 356 கிலோ பஞ்சு கொண்ட ஒரு கேண்டி(Candy) 'Shankar 6' ரக பஞ்சு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜவுளித் தொழில் வரலாற்றில் முதல் முறையாக பஞ்சு விலை இவ்வளவு பெரிய உயர்வைச் சந்தித்துள்ளது. 

இது குறித்து, கோவையை சேர்ந்த தென்னிந்திய பஞ்சாலை மில்கள் சங்க (சைமா) தலைவர் ரவிசாம், இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ஆகியோர் இதுகுறித்து கூறியதாவது:

பருத்தி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒட்டு மொத்த ஜவுளி தொழில் நிறுவனங்களும் மிக நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. பருத்தி இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய புக்கிங் செய்த பஞ்சு இந்தியாவுக்கு வந்து சேர இரண்டு மாதங்கள் ஆகும். அதுவரை உள்நாட்டில் பஞ்சு விலை அதிகரிப்பு தொடர்ந்து காணப்படும்.

அடுத்த மாதம் குறையும்

ஜூன் மாத இறுதியில் பஞ்சு விலை குறையத் துவங்கும். இந்த விலை உயர்வு ஜவுளி நிறுவனங்களையும் பாதித்துள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் இரண்டு மாதங்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க...

குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!

மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)