மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 August, 2020 4:45 PM IST
Credit:Saisan

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உளுந்து, பருத்தி, நிலக்கடலை ஆகியவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வரும் 15ம் தேதிக்குள் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, அந்தந்த மாவட்டத்தின் மண்வளம், சீதோஷணநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொண்டு, வெவ்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

அந்த வகையில் உளுந்து, பருத்தி, நிலக்கடலை ஆகிவற்றை சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம், எஸ்.புதூர், சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில், காரீஃப் பருவ பயிர்களான உளுந்து, பருத்தி மற்றும் நிலக்கடலை பயிருக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளளலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Credit: Wikipedia

நடப்பு பருவத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம், பயிர் காப்பீட்டு அடங்கல் பெற்று, ஒரு ஏக்கருக்கு ரூ.416 பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.இதேபோல் மற்ற பயிர்களுக்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

அந்தந்த பகுதியில் உள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், வர்த்தக வங்கிகளில் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பூச்சி, நோய் தாக்குதல், வறட்சி, வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களால் பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மகசூல் இழப்பினை கணக்கிட்டு ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்தால் (Oriental Insurance) விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

மேலும் படிக்க...

கால்நடைகளின் பசுந்தீவனமான அசோலா- இயற்கை முறையில் வளர்ப்பது எப்படி?

மக்காச்சோள உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு 35% மானியம்- தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு!

English Summary: Crop insurance for cotton, black gram and groundnut - last day on Sep 15!
Published on: 26 August 2020, 04:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now