Horticulture

Sunday, 06 September 2020 04:08 PM , by: Elavarse Sivakumar

தேவையில்லை எனத் துாக்கி எறியப்படும் சீமைக்கருவேல இலைச்சாறு, அலஞ்சி இலைச் சாறுகளை பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கும் டானிக்காகப் (Tonic)பயன்படுத்தலாம்.

ஆயுர்வேதம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரம், செடி, கொடிகளுக்கும் நன்மை தருகிறது. மண்ணின் தரத்தை மேம்படுத்த உரங்களுக்கு பதிலாக பயறு வகை குடும்பத்தைச் சேர்ந்தவற்றைக்கூட பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்கச் செய்ய முடியும்.

அதற்கு கொளிஞ்சி, சணப்பு, எருக்கு செடிகளை பயிரிட்டு மண்ணுடன் கலந்து உழவேண்டும்.
உழுவதற்கு முன் கிளரிசிடியா, வேம்பு, சவுண்டல், வாகை மரங்களின் இலைகளை துாவி 45 நாட்கள் கழித்து செடிகளை நடலாம்.

இதன்மூலம், இலைகள் மட்கி பயிர்களுக்கு தேவையான தழைச்சத்து அதிகரிக்கும். இதிலிருந்து வெளிவரும் கரிமச்சத்தின் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவு கிடைப்பதோடு மண்வளமும் அதிகரிக்கும்.

Credit : Facebook

விளைச்சல் அதிகரிக்கும்

பாலை, மஞ்சணத்தி, கல்யாணமுருங்கை, சிசுமரம், அகத்தி, அலஞ்சி, வில்வ இலைகளின் சாற்றை பயிர்களின் மீது தெளித்தால் விளைச்சல் அதிகரிக்கும்.

இதன் மூலம் ரசாயன உரம் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.

இவற்றைக் கையாள்வதன்மூலம் மண்ணுக்கும், மனிதனுக்கும் நஞ்சில்லாத உணவுகளை உற்பத்தி செய்து நீண்டகாலம் நலமுடன் நாமும் வாழலாம், மற்றவர்கள் வாழவும் துணை நிற்கலாம்.

தகவல்

சி.சுவாமிநாதன்

உழவியல் பேராசிரியர்

மதுரை விவசாய கல்லுாரி

மேலும் படிக்க...

விளைபொருட்களை கூடுதல் விலைக்கு வாங்கும் ஆரமுது உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்-விவசாயிகள் பயனடைய அழைப்பு!

சுயவேலைவாய்ப்பை உறுதி செய்யும் வேளாண் பட்டயப்படிப்புகள்- மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)